News March 29, 2025
இ(பி)றந்த குழந்தைக்கு வந்தது உயிர்…அதிசயமா? அலட்சியமா?

அரசு சுகாதார மையத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட பச்சிளம் குழந்தை, தனியார் ஹாஸ்பிடலில் உயிர்பிழைத்த சம்பவம் பிஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகதூர் பைதா – ஜோதி குமாரி தம்பதிக்கு பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாக அரசு டாக்டர் கூறியுள்ளார். பின்னர், தனியார் ஹாஸ்பிடலில் ஆக்சிஜன் செலுத்தியபோது குழந்தை அழத் தொடங்கி இருக்கிறது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 4, 2025
குழந்தைகளுக்கு எப்போது பசும்பால் கொடுக்கலாம்?

தாய்மார்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் பசும்பாலில் புரோட்டீன் அதிகமாக இருப்பதால் அவர்களால் அதை எளிதில் செரிக்க முடியாது. அரிதான நேரங்களில் சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம். குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 4, 2025
தேவை இல்லாத பதற்றத்தை உண்டாக்க முயற்சி: EPS

திருப்பரங்குன்றத்தில் கடந்த 2 நாள்களாக தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க, திமுக கபட நாடகம் ஆடுவதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். தீபம் ஏற்றக் கூறி மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தும், அதை செயல்படுத்த தவறியதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ‘எம்மதமும் சம்மதம்’ என இல்லாமல், தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
டிகிரி வேண்டாம்.. Zoho-ல் வேலை உண்டு: ஸ்ரீதர் வேம்பு

US-ல் திறமையான பள்ளி மாணவர்களுக்கு, பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்குவதாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இதுதான் உண்மையான இளைஞர் சக்தி எனவும், டிகிரியை காட்டிலும் திறமைக்கே அங்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் எனது நிறுவனத்தில் வேலைக்கு சேர டிகிரி தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க, கமெண்ட் பண்ணுங்க.


