News March 15, 2025
மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்

மக்களின் நம்பிக்கை, மூட நம்பிக்கையாக மாறும்போது அவர்களது செயல்கள் தடம் மாறுகின்றன. போபாலில் 6 மாத குழந்தை ஒன்று அழுதுகொண்டே இருக்க, அதற்கு பேய் பிடித்திருப்பதாக மாந்திரீகர்கள் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல், பேய் ஓட்டுவதாக கூறி, நெருப்பின் மேல் குழந்தையை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால், குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 16, 2025
இன்றைய (மார்ச் 16) நல்ல நேரம்

▶மார்ச்- 16 ▶பங்குனி – 2 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 03:30 PM – 04:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 AM – 06:00 AM ▶எமகண்டம்: 12:00 AM – 01:30 AM ▶குளிகை: 03:00 AM- 04:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி ▶நட்சத்திரம் : ஹஸ்தம்.
News March 16, 2025
எலும்புகள் வலுவாக இருக்க..

நமது எலும்புகள் வலுவாக இருக்க என்ன செய்ய வேண்டும்? ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, கால்சியம், வைட்டமின்கள் D மற்றும் K நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை சிறிய அளவில் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் அத்திப்பழம், கடல் மீன், பாதாம் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 16, 2025
பாகிஸ்தானில் இந்திய பாடல்களுக்கு தடைவிதிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கல்வி நிலையங்களில் இந்திய பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் இந்திய பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாப் மாகாண அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.