News January 24, 2025
வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்: அரசு விளக்கம்

பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என TN அரசு தெரிவித்துள்ளது. பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை, விசாரணைக்கு பிறகு அனுப்பப்படவுள்ளார், அவர்களை டெல்லிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசு குறிப்பிட்டுள்ளது. பஞ்சாப்பில் வீராங்கனைகள் தாக்கப்படும் வீடியோ வெளியானது. போட்டி நடுவர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதில் பிரச்னையானதாக கூறப்படுகிறது.
Similar News
News October 15, 2025
அடிப்படை பண்பு இல்லாதவர் விஜய்: சிபிஎம்

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்ற அடிப்படை பண்பு கூட இல்லாதவர்தான் விஜய் என சிபிஎம் பாலாகிருஷ்ணன் கூறியுள்ளார். SC-யில் வழக்கு போட்டவரே, வழக்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார் எனவும், இதை ஏன் SC தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இப்படியொரு அரசியல் தலைவரை தமிழ் சமூகம் இதுவரை பார்த்தது இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News October 15, 2025
Recipe: சுவையான பிரட் பாசந்தி செய்வது எப்படி?

வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி, குங்குமப்பூ போட்டு கொதிக்க விடவும். அவ்வாறு கொதிக்கும்போது, அதில் சேரும் ஆடையை தனியே எடுத்து வைக்கவும். பால் பாதியளவு சுண்டிய பிறகு, அதில் பிரட் தூள், ஏலக்காய், பாதாம் பொடி, சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். கெட்டி பதம் வந்தவுடன், எடுத்து வைத்த பாலாடை, பால் கோவா, மில்க் மெய்ட் கலந்து கிளறி ஐஸ் சேர்த்து மேலே முந்திரி, கிஸ்மிஸ் தூவினால், பிரட் பாசந்தி ரெடி.
News October 15, 2025
தேர்வு கிடையாது.. மத்திய அரசில் வேலை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) 1,101 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஃபிட்டர் முதல் நர்சிங் வரை பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ITI (அ) டிகிரி. உதவித்தொகை: ₹10,019/ ₹12,524. தேர்வு முறை: கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.21. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <