News August 15, 2024
நாளை அவசரமாக கூடுகிறது அதிமுக செயற்குழு

அதிமுக அவசர செயற்குழுக்கூட்டம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை (ஆக.16) காலை நடைபெற உள்ளது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கட்சித்தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்களை இயற்ற அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Similar News
News November 28, 2025
உள்வாங்கும் சென்னை.. காத்திருக்கும் ஆபத்து

ஜனத்தொகை, நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நிலம் உள்வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2015-2023 வரையிலான சாட்டிலைட் படங்களை ஆராய்ந்ததில் சென்னையில் 30 மி.மீ அளவிற்கு நிலங்கள் உள்வாங்கியுள்ளன. குறிப்பாக சென்னையில் அடையார், தண்டையார்பேட்டை, வளசரவாக்கத்தில் நிலம் உள்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
News November 28, 2025
சிரிக்கும் ரோஜா பிரியம்வதா கிருஷ்ணன்

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியம்வதா கிருஷ்ணன், ‘நரிவேட்டா’ படத்தில் வரும் மின்னல்வள பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது சிவப்பு நிற ஆடையில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. ரோஜா மலர் பிரியம்வதாவை பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 28, 2025
ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை அடக்க வன்முறையை கையாண்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்நாட்டு Ex PM ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புர்பச்சல் ஊழல் வழக்கில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புர்பச்சல் புதிய நகர் திட்டத்தில் ஹசீனா & அவரது குடும்பத்தினருக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


