News March 15, 2025

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாகிறது!

image

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 5ஆவது பட்ஜெட்டாகும். சிறு, குறு விவசாயிகளுக்கான மானியம், கரும்பு மற்றும் முந்திரி விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்பு, பயிர் காப்பீடு, இளைஞர்கள் கால்நடை பண்ணை வைக்க மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 15, 2025

ஊரகப் பகுதியில் காளான் உற்பத்தி நிலையம்!

image

புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்காக ஊரகப் பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். ₹50 கோடியில் வேளாண் விளை பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

News March 15, 2025

3,000 ஏக்கரில் மல்லி சாகுபடி ஊக்குவிப்பு

image

தமிழக வேளாண் பட்ஜெட்டில் மல்லி சாகுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொத்தம் 3,000 ஏக்கர் பரப்பில் 7,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் மல்லி சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை மல்லி சாகுபடியை அதிகப்படுத்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம்

image

தக்காளி, வெங்காயம், முருங்கை, கத்திரி, பச்சை மிளகாய், கீரை போன்ற முக்கிய காய்கறிகள் சாகுபடி பரப்பு 14,000 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காய்கறி தேவையை நிறைவு செய்யும் வகையில் 1200 ஏக்கரில் பந்தல் காய்கறி பரப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!