News March 6, 2025
தொடையில் தங்கம் கடத்தி வந்த நடிகை!

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்து கைதான நடிகை ரன்யா ராவ், பல அதிர்ச்சி தகவல்களை கூறி வருகிறார். கடந்த ஓராண்டில் மட்டும் 30 முறை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று, தான் தங்கம் கடத்தி வந்ததாகவும், ஒரு ட்ரிப்புக்கு ரூ.12 லட்சம் வழங்கப்பட்டதாகவும் ரன்யா ராவ் கூறியுள்ளார். மேலும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக தங்கத்தை தனது தொடையில் ஒட்டி வைத்து எடுத்து வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Similar News
News March 7, 2025
பங்குச்சந்தைகள் மேலும் சரியும்?

தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள், இரண்டு நாள்களாக உயர்ந்து வருகிறது. ஆனால், இது தற்காலிகம்தான் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்னும் விற்பதை நிறுத்தாததால், பங்குச்சந்தை மேலும் சரியும் எனவும் சில்லரை முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நிஃப்டி இன்று 22,544 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
News March 6, 2025
CISF படையில் 3 ஆண்டுகளில் 50,000 பணியிடங்கள்

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக அதன் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களை தொடர்புகொள்ள நாடு முழுவதும் 10 இடங்களில் பொது தகவல் மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் அவசர உதவிகள் பெறலாம் என்றும் குறிப்பிட்டார். இளைஞர்களே, இந்த வேலைவாய்ப்பை குறித்து வையுங்கள். விரைவில் அறிவிப்பு வரலாம்.
News March 6, 2025
SK வளர்ச்சியால் பொறாமையா? ஷ்யாம் ஓபன் டாக்

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி நடிகர் ஷ்யாம் தனது கருத்தை கூறியுள்ளார். நடன நிகழ்ச்சி ஒன்றில் நான் ஜட்ஜாக இருந்த போது, போட்டியாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். ஆனால், இப்போது அவர் எங்கே இருக்கிறார் பாருங்கள் என பலரும் என்னிடம் சொல்வார்கள். அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படாமல், கடவுள் நமக்கு என்ன கொடுத்திருக்கிறாரோ அதற்கு நன்றி சொன்னாலே போதும். மகிழ்ச்சி தானாக வரும் என ஷ்யாம் கூறினார்.