News April 16, 2024

நாய் பாசத்தால் உயர்நீதிமன்றம் சென்ற நடிகை

image

நாயை கொன்றவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ஆயிஷா ஜூல்கா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். கடந்த 2020இல் அவர் வீட்டில் வேலை பார்த்தவரே அந்த நாயை கொன்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டு 2 நாளில் ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், வழக்கு 4 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருவதால், ஆயிஷா தற்போது மனு அளித்துள்ளார். இவர், இந்தியில் ‘குர்பான்’ படத்தில் நடித்துள்ளார்.

Similar News

News August 15, 2025

பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணியுங்கள்: ஹர்பஜன்

image

ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் நமது இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்வதை ஒப்பிடும் போது ஒரு போட்டியை தவிர்ப்பது சிறிய காரியம் தான் என்றார். இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு முடிவு எட்டும் வரை பாகிஸ்தான் உடனான போட்டிகளை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

News August 15, 2025

வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம்: PM மோடி

image

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துகளை மக்களுக்கு PM மோடி தெரிவித்துள்ளார். இந்நாள் தரும் ஊக்கத்தில் கடுமையாக உழைத்து நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம் என தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் 12-வது முறையாக PM மோடி செங்கோட்டையில் கொடியேற்ற உள்ளார்.

News August 15, 2025

₹3,000 டோல்கேட் FAStag பாஸ் இன்று அமலுக்கு வருகிறது

image

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் எவ்வித கட்டணமுமின்றி பயணிக்கலாம். Rajmarg Yatra செயலியில் PASS வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண், வாகன பதிவு எண், பாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.

error: Content is protected !!