News March 19, 2024

சூட்டிங்கிற்கு லேட்டாக வந்ததால் அடி வாங்கிய நடிகர்

image

படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததால், இந்தி நடிகர் கோவிந்தா கன்னத்தில் அறை வாங்கிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது. சுமார் 400 படங்களில் நடித்துள்ளவர் மூத்த நடிகர் அம்ரிஷ் புரி. அவருடன் இணைந்து நடித்தபோது, 9 மணி நேரம் தாமதமாக கோவிந்தா வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த அம்ரிஷ் புரி, கோவிந்தாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்பிறகு, இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

Similar News

News December 4, 2025

ஸ்டாலினின் சூழ்ச்சியால் பிரச்னை எழுந்தது: நயினார்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போலீசாரை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் CM ஸ்டாலின் செயல்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஸ்டாலினின் பிரித்தாலும் சூழ்ச்சியினால் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்கிவருவதால் திமுக நடுக்கத்தில் இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

News December 4, 2025

சமந்தா கணவரின் EX மனைவி எமோஷனல் பதிவு

image

சமந்தா உடனான திருமணம் நடந்து 3 நாள்களுக்கு பிறகு, ராஜ் நிடிமோருவின் EX மனைவி ஷியாமளி தனது இன்ஸ்டாவில் எமோஷனல் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் பல நாள்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், அப்போது தனக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி எனவும் அவர் அதில் கூறியுள்ளார். மேலும், கவன ஈர்ப்பிற்காகவோ, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து டிராமா நடத்தவோ இதை பதிவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசுக்கு அதிர்ச்சி

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை மதுரை HC அமர்வு தள்ளுபடி செய்தது. தமிழக அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் HC அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசு கடமையை தவறியதாலேயே CISF வீரர்கள் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

error: Content is protected !!