News April 26, 2024
80,000 சதுர அடியில் சுதந்திர தின அருங்காட்சியகம்

சென்னை மெரினா அருகே உள்ள ஹுமாயூன் மஹால் கட்டடத்தில், 80,000 சதுர அடி பரப்பளவில் சுதந்திர தின அருங்காட்சியம் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் தியாகம், பங்களிப்பை போற்றும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. முன்னதாக விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பை போற்ற, அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
Similar News
News January 24, 2026
அலர்ட்.. 8 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 24, 2026
NDA ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி: செல்வப்பெருந்தகை

முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாக, அதிமுக கூட்டணி உள்ளதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். நாட்டிலேயே பாஜகவை கடுமையாக எதிர்க்கின்ற மாநிலமாக தமிழகம் இருப்பதை, PM மோடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு தமிழகம் மீது காட்டும் பாரபட்ச போக்கே தமிழக மக்கள் பாஜகவை தோற்கடிப்பதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
இனி பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிம்மதி

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் ஊதியத்தை, பிள்ளைகளின் கல்விக்காகவே அதிகம் செலவு செய்கின்றனர். ஆண்டுக் கட்டணம், புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட பல வகைகளில் பெற்றோர்களிடம் ₹30,000 முதல் ஒரு லட்சத்திற்கு மேல் வசூலிக்கப்படுகிறது. சில தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையிலும் ஈடுபடுகின்றன. இதனால், பெற்றோர் கடன் வாங்கும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதை கட்டுப்படுத்த <<18945619>>TN அரசு நடவடிக்கை<<>> எடுத்துள்ளது.


