News April 24, 2024
நாளையுடன் ஓய்வடையும் 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரை

மக்களவைத் தேர்தலில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.26இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பரப்புரை நாளையுடன் ஓய்வடைகிறது. இதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில், ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர் ஆகிய முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Similar News
News November 13, 2025
விதவிதமாக நிறங்களில் கண்கள் – ஸ்வைப் பண்ணுங்க

உலகில் மனிதர்கள் பல விதம் என்பதுபோல, கண்களின் நிறங்களும் பல விதமான வண்ணங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வண்ணத்திலும், அரிதாக சிலருக்கு மட்டுமே பிற வண்ணங்களில் உள்ளன. என்னென்ன வண்ணங்களில் கண்கள் உள்ளன, அவை எத்தனை சதவீத மக்களுக்கு உள்ளன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 13, 2025
₹397 கோடி ஊழல்.. திமுக அரசு மீது அறப்போர் புகார்

₹397 கோடி ஊழலின் முக்கிய புள்ளிக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தலைமை நிதி கட்டுப்பாட்டாளராக (CFC) பதவி உயர்வு பெற்றுள்ள காசி , டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து செய்த செட்டிங் காரணமாக சந்தை விலையை விட 40% அதிகமாக டெண்டர் ஆணை வழங்கப்பட்டதாக புகாரளித்துள்ளது. இது திமுக ஊழல் மாடலின் மற்றொரு சாதனை என்றும் அறப்போர் சாடியுள்ளது.
News November 13, 2025
ஹீரோ லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?

இயக்கத்திற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, ஹீரோவாக களமிறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், அறிமுகமாகும் முதல் படத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக, ₹35 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘DC’ படத்தில் கதை, திரைக்கதை, வசனத்திலும் லோகேஷின் பங்களிப்பு உள்ளதால் சன் பிக்சர்ஸ் இந்த தொகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


