News August 15, 2025
மகளிர் உரிமைத்தொகை 24-வது தவணை வந்தது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 24-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News March 7, 2026
கிருஷ்ணகிரியில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

கிருஷ்ணகிரி மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
OPS எண்ட்ரியால் திமுகவில் சலசலப்பா?

OPS வருகையால் திமுகவின் தென்மாவட்ட நிர்வாகிகள் பலர் முகம் வாடுகின்றனராம். காரணம், அதிமுகவில் இருந்து வருகிறவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தலைமை, ஏற்கெனவே இருக்கும் நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குகிறது என்கின்றனராம். அத்துடன் ஜெ.,வின் ஆதரவாளரான OPS தற்போது திமுக புகழ் பாடத்தொடங்கியிருப்பதால் அவருக்கு இருந்த சமூக ஆதரவும் குறைந்திருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
News March 7, 2026
நகைக்கடன் தள்ளுபடி .. வெளியான மகிழ்ச்சி செய்தி

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பெண்களை கவரும் வகையில், மகளிர் தினத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை விஜய் வெளியிடுகிறார். நாளை திமுகவும், அதிமுகவும் பெண்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது


