News September 23, 2025
தவெக தனித்து ஆட்சி அமைக்கும்: அருண்ராஜ்

தவெக 30% வாக்கு வங்கியை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு வருவது பணம் கொடுப்பதால் வரும் கூட்டம். ஆனால், விஜய்க்கு வருவது தன்னெழுச்சியான கூட்டம் எனக் கூறிய அவர், தற்போது எடுக்கப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகள் தவெகவுக்கு சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News September 23, 2025
வங்கிக் கணக்கில் ₹2,000: இதை செய்தால் கிடைக்கும்

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வரும் <<17775670>>அக். 18-ம் தேதி <<>>₹2,000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விவசாயிகள் இதை பெறுவதற்கு e-KYC, நிலப்பதிவுகள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகளை செய்ய வேண்டியது அவசியம். அதேபோல், தங்களது விவசாயி பதிவேட்டையும் புதுப்பிக்க வேண்டும். மேலும், தங்கள் வங்கிக் கணக்கில் நேரடி மானிய விருப்பத்தையும், ஆதார் மற்றும் மொபைல் எண்ணை இணைப்பதும் கட்டாயமாகும்.
News September 23, 2025
+2 போதும்.. மத்திய அரசில் ₹21,700 சம்பளத்தில் வேலை!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹21,700- ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News September 23, 2025
திமுக கூட்டணியில் பூசல்: இபிஎஸ்

திமுக கூட்டணியில் பிரச்னை ஆரம்பித்துவிட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, திமுகவிடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்க ஆரம்பித்துவிட்டதாகவும், இதனால் இருகட்சிகளுக்கு இடையே பூசல் வெடித்துள்ளதாகவும் அவர் பிரசாரத்தில் பேசியுள்ளார். மேலும், காங்கிரசாருக்கு இப்போதாவது ஞானோதயம் வந்ததே என கூறிய அவர், விரைவில் திமுக கூடாரம் காலி ஆகிவிடும் என கூறியுள்ளார்.