News April 29, 2025
தவெக கொடி வழக்கு..விஜய் பதிலளிக்க உத்தரவு

தவெக கொடியில் யானையை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சி(BSP) தொடர்ந்த வழக்கில் விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. BSP சின்னமாக யானை உள்ளதால் தவெக தனது கொடியில் யானைகளை பயன்படுத்தக் கூடாது என BSP வழக்குத் தொடர்ந்தது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக கொடிக்கு சிக்கல் வருமா, வராதா?
Similar News
News February 6, 2026
கோடிகளில் சம்பாதித்தாலும் சந்தோஷம் இல்லை: அனிருத்

கோலிவுட்டில் ஒரு படத்திற்கு இசையமைக்க ₹8 முதல் ₹10 கோடி சம்பளம் வாங்குபவர் அனிருத். இந்நிலையில், சிறுவயதில் கல்யாணங்களுக்கு வாசிக்க சென்ற போது ₹500 சம்பளம் தருவார்கள் என்ற அவர், சில சமயங்களில் வெற்றிலை பாக்கு கொடுத்து நன்றிகூறி வீட்டுக்கு அனுப்புவார்கள். ₹500 ரூபாய் பெற்ற போது கிடைத்த சந்தோஷம், தற்போது கோடிகளில் சம்பாதித்தாலும் கிடைப்பதில்லை என அனிருத் வருந்தியுள்ளார்.
News February 6, 2026
இந்தியா, US வர்த்தக டீல்.. இறுதி முடிவு

இந்தியா, US வர்த்தகத்தின் சட்டப்பூர்வ ஒப்பந்தமானது மார்ச் மாதத்தில் கையெழுத்தாகும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுபற்றிய இருநாடுகளின் கூட்டறிக்கை அடுத்த 4-5 நாள்களில் வெளியானவுடன் அதிபர் டிரம்ப் அரசாணை பிறப்பிப்பார் என்ற அவர், தற்போது உள்ள 50% வரி 18% ஆக குறைக்கப்படும் எனக் கூறினார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப ₹45 லட்சம் கோடிக்கு US பொருள்கள் வாங்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.
News February 6, 2026
ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு.. PM மோடி காட்டம்

இந்திய இளைஞர்களின் உரிமைகளை ஊடுருவல்காரர்கள் தட்டிப் பறிப்பதாக PM மோடி கூறியுள்ளார். ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டிய PM மோடி, அவர்கள் பழங்குடியினரின் நிலங்களை பறித்துவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரிசெய்வதிலேயே பாஜக அரசுக்கு நேரம் போய்விடுவதாகவும், இதற்கு எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் PM மோடி குறிப்பிட்டார்.


