News April 19, 2024
மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

தேர்தலில் அனைவரும் வாக்களிக்குமாறு தவெக தலைவர் விஜய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலையிலேயே அவர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். இந்நிலையில், தேர்தலில் வாக்களித்து நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News August 20, 2025
FLASH: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி!

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சிகிலி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, வழியில் இருந்த குளத்தில் குழந்தைகள் குளித்தபோது இந்த துயரம் நடந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5-ம் வகுப்பு மாணவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. So Sad..!
News August 20, 2025
மாலை 6 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

*PM, CM, மத்திய அமைச்சர்கள் 30 நாள்கள் வரை சிறையில் இருந்தால், அவர்களது பதவி பறிக்கும் <<17462647>>மசோதா<<>> லோக்சபாவில் தாக்கல். *பதவியை பறிக்கும் மசோதாவை கருப்பு மசோதா எனவும், இன்று கருப்பு நாள் என்றும் <<17464824>>CM ஸ்டாலின்<<>> கண்டனம். *<<17463695>>தவெக<<>> மாநாட்டு பணியின் போது, 100 அடி கொடிக்கம்பம் விழுந்து விபத்து. *<<17464229>>கூலி<<>> படத்திற்கு U/A சான்றிதழ் கோரி தாக்கல் செய்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.
News August 20, 2025
தமிழகத்தில் 7 மாதங்களில் 850 கொலை: சாடிய EPS

திமுக தேய்ந்து கொண்டிருப்பதால் வீட்டின் கதவை தட்டி உறுப்பினர்களை சேர்த்து வருவதாக EPS சாடியுள்ளார். ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 850 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார். மேலும், தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்றார்.