News February 18, 2025
மரணத்திலும் பலருக்கு வாழ்வு கொடுத்த அந்த தாய்!

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்ற பெண், அக்குழந்தையை பார்க்காமலேயே உயிரிழந்த துயரம் டெல்லியில் நடந்துள்ளது. கர்ப்பிணியான அஷிதா (38) கடந்த 7ஆம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து, சிசேரியன் மூலம் பெண் குழந்தையை வெளியில் எடுத்தனர். ஆனால், கடந்த 13ஆம் தேதி அஷிதா மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தார் தானம் செய்தனர்.
Similar News
News March 11, 2026
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இணைய சேவை பாதிப்பா?

சிலிண்டர் பற்றாக்குறையால் மொபைல் மற்றும் இணைய சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செல்போன் டவர்கள் துருப்பிடிப்பதை தடுக்க அவற்றின் உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் துத்தநாகத்தின் பாதுகாப்பு அடுக்குக்கு எல்பிஜி/எல்என்ஜி தேவைப்படுகிறது. தற்போது அவை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால், இது நெட்வொர்க் விரிவாக்கத்தை தாமதப்படுத்தும் & இணைய சேவையை பாதிக்கும் என்கின்றனர்.
News March 11, 2026
ஹீரோயினாகும் மகள் குறித்து மனம் திறந்த குஷ்பூ

சுந்தர் சி – குஷ்பூ தம்பதியரின் மகளான அவந்திகா `ஆரம்பம்’ என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். இந்நிலையில், குழந்தைகள் அவர்கள் விரும்புவதை அவர்களாகவே செய்ய வேண்டும்; அடிபட்டாலும் பரவாயில்லை, கீழே விழுந்து எழுந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும் என குஷ்பூ கூறியுள்ளார். இதில் தங்கள் பங்களிப்பு துளியும் இல்லை; அவளாகவே கதை கேட்டு, முடிவு செய்கிறாள் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


