News February 18, 2025

மரணத்திலும் பலருக்கு வாழ்வு கொடுத்த அந்த தாய்!

image

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்ற பெண், அக்குழந்தையை பார்க்காமலேயே உயிரிழந்த துயரம் டெல்லியில் நடந்துள்ளது. கர்ப்பிணியான அஷிதா (38) கடந்த 7ஆம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து, சிசேரியன் மூலம் பெண் குழந்தையை வெளியில் எடுத்தனர். ஆனால், கடந்த 13ஆம் தேதி அஷிதா மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தார் தானம் செய்தனர்.

Similar News

News September 13, 2025

லோகேஷ் – அமீர்கான் படம் கைவிடப்பட்டதா?

image

லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் இணைந்து பணியாற்றவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சித்தாரே ஜமீன் பர்’ பட நிகழ்ச்சியில் அமீர்கான், லோகேஷ் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறினார். ஆனால் தற்போது கமல் – ரஜினி படம், கைதி 2-ல் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். அமீர்கான் உடனான படம் கைவிடப்பட காரணம் என்ன? தேதிகள் பிரச்னையா என உறுதியான தகவல் தெரியவில்லை.

News September 13, 2025

செப்டம்பர் 13: வரலாற்றில் இன்று

image

*1948 – ஐதராபாத்தை இந்திய ஒன்றியத்தில் இணைக்க துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். *1960 – நடிகர் கார்த்திக் பிறந்தநாள். *2008 – டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உயிரிழப்பு.

News September 13, 2025

BCCI-க்கு வலுக்கும் கண்டனம்

image

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட வடு இன்னும் மறையாத நிலையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது அவசியமா என்றும் பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் நோக்கமா எனவும் BCCI-க்கு SM-ல் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, மத்திய அரசு அனுமதித்ததால் பாக். உடன் விளையாடுவதாக BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!