News April 2, 2024

கன்னடத்தில் நன்றி தெரிவித்த அண்ணாமலை

image

அண்ணாமலை பொதுமக்களிடம் கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்து ஆச்சரியப்படுத்தினார். கோவையில் போட்டியிடும் அவர், கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வீரகேரளம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவருக்கு குறும்பர் இன மக்கள் கம்பளியை பரிசாக அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அண்ணாமலை கன்னட மொழியில் நன்றி தெரிவித்தார். இதனை கண்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

Similar News

News August 12, 2025

கூலி பீவர்.. ₹4,500க்கு விற்பனையாகும் FDFS டிக்கெட்!

image

வரும் 14-ம் தேதி வெளியாக இருக்கும் ‘கூலி’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள், மாநிலம் கடந்து சென்று கள்ள சந்தையில் பல ஆயிரங்களை செலவு செய்து டிக்கெட் வாங்கியுள்ளனர். சென்னையின் பல முக்கிய திரையரங்குகளில் கள்ளச் சந்தையில் ₹4,500-க்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீங்க டிக்கெட் வாங்கியாச்சா?

News August 12, 2025

Asia Cup.. பெஸ்ட் பிளேயிங் XI எது?

image

செப்டம்பரில் தொடங்கும் Asia Cup-ல் யார் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அபிஷேக் சர்மா, கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜுரெல், அக்சர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 19 அல்லது 20-ம் தேதி அணி அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. நீங்க ஒரு பெஸ்ட் பிளேயிங் XI-யை கமெண்ட் பண்ணுங்க?

News August 12, 2025

CM பொறுப்புடன் பேச வேண்டும்: நயினார் கண்டனம்

image

வாக்கு மோசடியில் ECI ஈடுபட்டதாக <<17367499>>ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு <<>>நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ECI-யின் மீது குற்றம்சாட்டுவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என தெரிவித்த அவர், CM பொறுப்புடன் பேச வேண்டும் என வலியுறுத்தினார். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ECI கேட்ட விளக்கத்துக்கு ராகுல் பதில் அளிக்காமல், அதை நியாயப்படுத்த முயல்வது தவறு எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!