News March 17, 2024
தஞ்சாவூர் ஆட்சியர் ஆலோசனை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (17.03.2024) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 31, 2026
தஞ்சை: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
தஞ்சை: சிறுமி பாலியல் வன்கொடுமை – 7 பேர் கைது

பாபநாசம் அருகே சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திர பாண்டியன் (21), சண்முகம் (21). புண்ணியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் (21), அசோக் (21), பசுபதி கோவிலைச் சேர்ந்த சுதன் (21) மற்றும் 2 சிறுவர்கள் ஆகிய 7 பேர் 17 வயது சிறுமியை பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் 7 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News January 31, 2026
தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேதுபாவச்சத்திரம், திருமலைசமுத்திரம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.31) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!


