News December 5, 2024

விவாதம் நடத்த கோரி நோட்டீஸ் அளித்த தம்பிதுரை…

image

தமிழக புயல் பாதிப்புகள் குறித்து விதி எண் 267இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி அதிமுக எம்.பி., தம்பிதுரை நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான புயல் பாதிப்பை தமிழகம் கண்டுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை & கடலோர மாவட்டங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்த நோட்டீஸ் விவாதத்திற்கு ஏற்கப்படவில்லை.

Similar News

News October 31, 2025

இது வேற மாதிரி போலீஸ்

image

பிரேசிலின் வடகிழக்கே அமைந்துள்ள மராஜோ தீவில் உள்ள சோர் நகரில், காவல்துறை அதிகாரிகள் ரோந்துப் பணிகளுக்கு, கார்களோ அல்லது குதிரைகளோ பயன்படுத்துவதில்லை. மாறாக எருமைகளில் சவாரி செய்கிறார்கள். வாகனங்கள் ஈரநிலங்கள் வழியாக எளிதாகச் செல்ல முடியாததால், எருமைகளை பயன்படுத்துகின்றனர். ரோந்து பணிக்கு, எருமைகளைப் பயன்படுத்தும் உலகின் ஒரே போலீஸ் படை இவர்கள்தான். “எருமை ரோந்து” பற்றி உங்கள் கருத்து என்ன?

News October 31, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

மொன்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூரில் கடந்த 28-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் பள்ளிகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவள்ளூரில் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. அதில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகலாம்.

News October 31, 2025

PM பேசியது அண்ட புளுகு, ஆகாச புளுகு: திருமா

image

ஒரு பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக, எப்படி இப்படியான ஒரு அண்ட புளுகை, ஆகாச புளுகை பேசுகிறார் என்று தெரியவில்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பிஹார் மக்களை அச்சுறுத்துவதாக பேசிய மோடிக்கு கண்டனம் தெரிவித்த அவர், இது ஆபத்தான அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இந்த அரசியலை செய்வதாக அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!