News February 11, 2025

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம்

image

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 154வது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்ற முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். இன்று காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 12ஆம் தேதி காலை 5.30 மணி என திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

Similar News

News March 8, 2026

இலவசம் என்பது வளர்ச்​சியல்ல, அது வீழ்ச்சி: சீமான்

image

இது​வரை இருக்​கின்ற அரசி​யல் கோட்​பாடு, நிலைபாட்டில் முற்​றி​லு​மாக தங்கள் கட்சியின் கோட்பாடு மாறுபட்டது என சீமான் பேசியுள்ளார். புதுச்சேரி வேட்​பாளர் அறி​முக கூட்​டத்தில் பேசிய அவர், அனைத்துக்கும் இலவசம் அறிவிக்​கிறார்​கள். இலவசம் என்பது வளர்ச்​சித் திட்​டம் அல்ல. அது வீழ்ச்சி திட்​டம். கவர்ச்சி திட்​டம் என்றார். இலவசம் பெற வேண்டிய வறுமை இன்றி மக்​களை உயர்த்துவதே தமது கடமை எனவும் தெரிவித்தார்.

News March 8, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்: அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். ▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.

News March 8, 2026

ஜனாதிபதிக்கு நேர்ந்தது வெட்கக்கேடானது: PM மோடி

image

மேற்கு வங்கத்திற்கு சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை அம்மாநில CM மம்தா பானர்ஜி நேரில் வரவேற்காததை வெட்கக்கேடானது என PM மோடி சாடியுள்ளார். பழங்குடியை சேர்ந்த முர்மு வெளிப்படுத்திய வலி மற்றும் வேதனை, இந்திய மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; TMC அரசு அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது என்றும், ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு TMC-ன் நிர்வாகமே காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!