News June 14, 2024
இரட்டை குட்டி ஈன்ற தாய்லாந்து யானை

தாய்லாந்து நாட்டில் அரிதான நிகழ்வாக யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகளில் 1% மட்டுமே இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிலும் அரிதாக ஒரு குட்டி ஆணாகவும் (60 கிலோ), மற்றொரு குட்டி பெண்ணாகவும் (55 கிலோ) பிறந்துள்ளது. 89 ஆண்டுகளுக்கு முன் நைஜீரியாவில் ஒரு யானை இரட்டை குட்டி ஈன்ற பின், தாய்லாந்து யானை அந்த சாதனை படைத்துள்ளது.
Similar News
News September 6, 2025
பெரம்பலூர்: கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

பெரம்பலூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
முடி கருகருன்னு அடர்த்தியா வளர இந்த எண்ணெய் போதும்

நோயில்லாத வாழ்க்கைக்கு தினமும் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும் என சொல்வர். இத்தனை சிறப்பு மிக்க முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வுக்கும் அருமருந்தாகிறதாம். முருங்கை விதைகளை காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர முடி உதிர்வு குறையுமாம். SHARE.
News September 6, 2025
PAK உடனான போட்டியை புறக்கணிக்காதது ஏன்?

ஆசிய கோப்பையில் PAK உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்காதது குறித்து BCCI மவுனம் கலைத்துள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளின் படி சர்வதேச, பல தரப்பு போட்டிகளில் மட்டுமே IND அணி விளையாடுவதாகவும், PAK உடனான இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டால், இந்தியா மீது தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.