News March 24, 2025

10 நாட்களில் புற்றுநோய்களை கண்டறிய பரிசோதனை: மா.சு

image

பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிய அடுத்த 10 நாட்களில் வருவாய் மாவட்ட அளவில் முழு பரிசோதனை தொடங்கப்படவுள்ளது. சட்டப்பேரவையில் இதனை தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க HPV தடுப்பூசியும் செலுத்தப்படும் என்றார். இதற்காக தமிழக அரசு ₹37 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

Similar News

News August 6, 2025

தீ விபத்தால் ரத்தானது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

image

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் இன்று ஹையாத் நட்சத்திர விடுதியில் தொடங்க இருந்தது. ஆனால் நட்சத்திர விடுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தால் செஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.

News August 6, 2025

மழையில் ஃபோன் நனையாமல் காக்க…

image

மழையில் உங்கள் ஃபோன் நனையாமல் காக்க, எப்போதும் வாட்டர்புரூப் பவுச் வைத்திருக்கவும் *ஜிப்லாக் பவுச் மற்றும் சிலிகா ஜெல் பாக்கெட்களும் உங்கள் போன் ஈரமாகாமல் காக்கும் *அழைப்புகளை ஏற்க புளூடூத் ஹெட்போன்கள் பயன்படுத்தலாம் *மழையில் போனில் ஈரம் புகுந்துவிட்டால், சார்ஜ் போடுவதை கட்டாயம் தவிர்க்கவும் *அரிசிக்குள் (அ) சிலிகா ஜெல் பாக்கெட்கள் கொண்ட ஜிப்லாக் கவரில் ஈரம் உறிஞ்சப்படும் வரை போட்டு வைக்கலாம்.

News August 6, 2025

மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சி தலைவர்கள்

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமா, முத்தரசன், சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. 2026 தேர்தலை எதிர்கொள்வது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வருவது குறித்தும் வலியுறுத்த உள்ளனர்.

error: Content is protected !!