News March 24, 2024
300 பள்ளி குழந்தைகளை விடுவித்த தீவிரவாதிகள்

நைஜீரியாவில் கடத்தி சென்ற 300 பள்ளி குழந்தைகளையும் தீவிரவாதிகள் விடுவித்தனர். கதுனா மாகாணத்தில் உள்ள பள்ளிக்குள் கடந்த 7ஆம் தேதி புகுந்த தீவிரவாதிகள், 300 குழந்தைகளை கடத்திச் சென்றனர். இதையடுத்து அவர்களுடன் நைஜீரிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில், 300 பேரும் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 300 பேரை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.
Similar News
News February 7, 2026
விஜய் சம்பளத்தை டிக்ளேர் செய்ய முடியுமா? DMK அமைச்சர்

முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே விஜய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக அமைச்சர் MRK பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை தீய சக்தி என்று குற்றம்சாட்டும் விஜய், வரி ஏய்ப்பு செய்து ஊழல் செய்துள்ளதை கோர்ட்டே உறுதிப்படுத்திவிட்டது என்றார். மேலும், விஜய் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என டிக்ளேர் செய்ய தயாரா எனவும் சவால் விடுத்தார்.
News February 7, 2026
நகைக் கடன்.. RBI முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் 2025 டிசம்பர் நிலவரப்படி, நகைக் கடன்களின் அளவு ₹3.82 டிரில்லியனாக அதிகரித்திருப்பதாக RBI கவர்னர் தெரிவித்துள்ளார். ஆனால், தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக் கடன் நிலுவை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம் என வங்கிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நகை மதிப்பில் 85% வரை கடன் வழங்க ஏதுவாக, வங்கி சாராத நிதி நிறுவனங்கள் RBI முன் அனுமதியை பெறுவதில் இருந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
News February 7, 2026
பும்ராவுக்கு வைரஸ் காய்ச்சல்… முதல் மேட்ச்சில் ஆப்சென்டா?

டி20 உலக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று இரவு அமெரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாம். இதனால் சிராஜ் இன்றைய போட்டியில் களம் காண்பார் என கூறப்படுகிறது.


