News April 25, 2025

சுட்டுக் கொன்றதும் வெடித்து சிரித்த தீவிரவாதிகள்

image

பஹல்காம் தாக்குதலின் போது தீவிரவாதிகள் செய்த கொடூர செயல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. நெற்றியில் இருந்த பொட்டை அழித்து, அல்லாஹு அக்பர் சொன்ன பிறகும் தீவிரவாதிகள் தனது கணவர், அவரது நண்பரை கொன்றதாக தாக்குதலில் கொல்லப்பட்ட புனேவைச் சேர்ந்த கௌஸ்துப்பின் மனைவி சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவரை சுட்டுக் கொன்ற பின் தீவிரவாதிகள் வெடித்து சிரித்ததாக குஜராத்தைச் சேர்ந்த ஷீதல் கூறியுள்ளார்.

Similar News

News November 7, 2025

USA Passport-களில் இனி ஆண், பெண் மட்டுமே!

image

அமெரிக்காவில் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்று, USA Passport-களில் ஆண், பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே குறிப்பிட முடியும் என்ற உத்தரவு. இந்நிலையில், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், டிரம்பின் உத்தரவுக்கு தடை விதிக்க USA உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் திருநங்கைகள், மற்றும் பிற பாலின மக்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

News November 7, 2025

அதிமுகவுடன் கூட்டணிக்காக காத்திருந்தேன்: வைகோ

image

2011-ல் கூட்டணி விவகாரத்தில் OPS செய்த தவறுக்கு தான், தற்போது அவர் பலனை அனுபவித்து வருவதாக வைகோ விமர்சித்துள்ளார். மதிமுக கூட்டத்தில் பேசிய அவர், 2011-ல் மதிமுகவுக்கு 12 இடங்களை மட்டுமே தருவதாக இருந்த போதும், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதாவிடம் வைகோ கூட்டணிக்கு தயாராக இல்லை என்று OPS பொய் சொல்லிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 7, 2025

கெளரி கிஷனுக்கு ஆதரவாக களமிறங்கிய குஷ்பூ

image

கெளரி கிஷனிடம் எடை குறித்து கேட்ட செய்தியாளரை குஷ்பூ விமர்சித்துள்ளார். பெண்ணின் உடல் எடை என்பது இவர்களுக்கு தேவையற்ற விஷயம் எனவும், மீடியா தரக்குறைவாகி வருவதாகவும் விமர்சித்தார். இக்கேள்வியை அவர் வீட்டு பெண்களிடம் கேட்டால் அமைதியாக இருப்பாரா என்று வினவிய குஷ்பூ, அவருக்கு பதிலடி கொடுத்த கெளரியையும் பாராட்டினார். மேலும், மரியாதை கொடுத்தால் மட்டுமே மரியாதை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

error: Content is protected !!