News April 25, 2025
சுட்டுக் கொன்றதும் வெடித்து சிரித்த தீவிரவாதிகள்

பஹல்காம் தாக்குதலின் போது தீவிரவாதிகள் செய்த கொடூர செயல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. நெற்றியில் இருந்த பொட்டை அழித்து, அல்லாஹு அக்பர் சொன்ன பிறகும் தீவிரவாதிகள் தனது கணவர், அவரது நண்பரை கொன்றதாக தாக்குதலில் கொல்லப்பட்ட புனேவைச் சேர்ந்த கௌஸ்துப்பின் மனைவி சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவரை சுட்டுக் கொன்ற பின் தீவிரவாதிகள் வெடித்து சிரித்ததாக குஜராத்தைச் சேர்ந்த ஷீதல் கூறியுள்ளார்.
Similar News
News September 16, 2025
2-வது திருமணம்: வருத்தத்தில் மீனா!

நடிகை மீனா 2-வது திருமணம் செய்யப்போகிறார், இந்த நடிகருடன் தான் திருமணம் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து, அண்மையில் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மீனா, இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவாகரத்தான நடிகர்களுடன் தனக்கு திருமணம் என வெளிவந்த செய்திகள் மனதளவில் மிகவும் வருத்தமடைய செய்ததாக கூறினார். மீனாவின் கணவர் வித்யாசாகர் 2022-ல் காலமானார்.
News September 16, 2025
விஜய் கட்சிக்கு விரைவில் END: வைகைச் செல்வன்

தவெகவை சனிக்கிழமை கட்சி என்று அதிமுகவின் வைகைச் செல்வன் விமர்சித்துள்ளார். எப்படி ஐடி ஊழியர்கள் வீக் எண்டில் எங்காவது ஜாலியாக சென்று வருவார்களோ, அதுமாதிரியான Weekend கட்சி தான் விஜய்யின் கட்சி என்று அவர் கூறியுள்ளார். அக்கட்சி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே செயல்படும் கட்சி என்றும், அது விரைவிலேயே END கட்சி ஆகிவிடும் எனவும் அவர் கிண்டலாக பேசியுள்ளார்.
News September 16, 2025
அடமானம் இல்லாமல் ₹20 லட்சம் வரை கடன் தரும் திட்டம்

ஏழை எளியோரும் தொழில் தொடங்கி, தொழில்முனைவோராக மாற ₹20 லட்சம் வரை எந்த பிணையமும் இல்லாமல் கடன் வழங்குகிறது முத்ரா கடன் திட்டம். இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று இந்த திட்டத்தின் பலனை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள https://www.mudra.org.in/ -ஐ தளத்தை பார்வையிடுங்கள். SHARE.