News April 25, 2025
சுட்டுக் கொன்றதும் வெடித்து சிரித்த தீவிரவாதிகள்

பஹல்காம் தாக்குதலின் போது தீவிரவாதிகள் செய்த கொடூர செயல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. நெற்றியில் இருந்த பொட்டை அழித்து, அல்லாஹு அக்பர் சொன்ன பிறகும் தீவிரவாதிகள் தனது கணவர், அவரது நண்பரை கொன்றதாக தாக்குதலில் கொல்லப்பட்ட புனேவைச் சேர்ந்த கௌஸ்துப்பின் மனைவி சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவரை சுட்டுக் கொன்ற பின் தீவிரவாதிகள் வெடித்து சிரித்ததாக குஜராத்தைச் சேர்ந்த ஷீதல் கூறியுள்ளார்.
Similar News
News December 8, 2025
சிவாஜியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ரஜினி

‘படையப்பா’ படம் குறித்து ரஜினி பகிர்ந்துள்ள வீடியோவில், சிவாஜிகணேசன் பற்றிய வருத்தமான சம்பவம் ஒன்றையும் அவர் விவரித்துள்ளார். அதில், நான் இறந்த பின் என் உடம்பு கூடயே நீ வரியான்னு சிவாஜி கேட்டதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார். அவரது ஆசைப்படியே சிவாஜி இறந்ததுக்கு பின் உடல் வைத்திருந்த வாகனத்தில் கடைசி வரை போனதாகவும் மனம் உடைந்தபடி அவர் கூறியுள்ளார்.
News December 8, 2025
BREAKING: கூட்டணி முடிவு.. அறிவித்தார் அண்ணாமலை

வலிமையான கூட்டணியோடு 2026 தேர்தலை சந்திப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2 நாள்கள் அமித்ஷாவை சந்தித்து பேசிய அவர், மீண்டும் இன்று டெல்லி சென்றுள்ளார். முன்னதாக, கோவை ஏர்போர்ட்டில் பேட்டியளித்த அவர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என தனக்கு தோன்றவில்லை என குறிப்பிட்டார். மேலும், OPS, டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.
News December 8, 2025
சந்திரனில் மனிதன் தடம் பதித்து இன்றுடன் 53 ஆண்டுகள்!

‘அப்போலோ-11’ மூலம் 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனை அடைந்தார். இதுவரை 12 பேர் நிலவில் கால் பதித்து வலம் வந்துள்ளனர். 7.12.1972-ல் ‘அப்போலோ-17’ மிஷனில் யூஜின், ஹாரிசன் குழுவினர் 75 மணி நேரம் தங்கி ரோவரில் 35 km பயணித்து 110 கிலோ கற்கள், மண் மாதிரிகளை சேர்த்தனர். அதன் மூலமே நிலவில் ஒருகாலத்தில் எரிமலையின் செயல்பாடு இருந்தது உறுதியானது.


