News May 19, 2024

காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் உள்ளது

image

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் உள்ளது, அது முடிவுக்கு வரவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். சோபியான், அனந்த்நாக்கில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 2 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

Similar News

News March 11, 2026

டெல்லி பாஜக மீது அண்ணாமலை அதிருப்தியா?

image

மாநில தலைவர் பதவியைவிட பெரிய பதவி எதுவும் வழங்கப்படாததால், பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாக பேசப்பட்டது. இதனால்தான், தந்தையை கவனிக்க வேண்டும் என கூறி சமீபத்தில் தேர்தல் பணிக்கான பதவியை அவர் மறுத்தார் என்றனர். இந்நிலையில், கோவை (அ) திருப்பூரில், ஏதேனும் ஒரு தொகுதியை எடுத்துகொள்ளலாம் என மீண்டும் ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டதாம். ஆனால் அதையும் அவர் மறுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

News March 11, 2026

CM ஸ்டாலினின் கூட்டத்தில் 2 பேர் மரணம்

image

திருச்சியில், நேற்று முன்தினம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் 2 பேர் மரணமடைந்தனர். புதுக்கோட்டை, மங்களநாட்டை சேர்ந்த ஜெயராமன்(67) மாநாட்டு திடலில் அமர்ந்திருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல், பெரம்பலூரை சேர்ந்த சரோஜா(61) மாநாட்டு மைதான வாயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்விவகாரத்தை திமுக திட்டமிட்டு மறைத்துவிட்டதாக பாஜக, தவெகவினர் SM-ல் விமர்சித்து வருகின்றனர்.

News March 11, 2026

வீட்டு சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல்

image

வளைகுடா போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் வணிக சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல் எழுந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் மூலம் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், ‘சுவிட்ச் ஆப்’ என பதில் வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்னை இருக்கிறதா?

error: Content is protected !!