News April 14, 2025

நாட்டில் தீவிரவாதிகள் சதி.. உளவுத்துறை எச்சரிக்கை

image

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக மே.வங்கத்தில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. எல்லை பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் பல பிரச்னைகளை உருவாக்க வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்பான JMB தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள JMB, CAA எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது.

Similar News

News April 15, 2025

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நெருக்கடி

image

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 25-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே வழக்கில் தொடர்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. டெல்லி, மும்பையில் உள்ள ₹661 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களில் செயல்படும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சார்பில் நோட்ஸும் ஒட்டப்பட்டுள்ளது.

News April 15, 2025

இந்த Blood Group ஆளுங்களதான் கொசுக்கள் ஜாஸ்தியா கடிக்கும்!

image

எல்லோரையும் கொசுக்கள் ஒரே மாதிரிதான் கடிக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. கொசுக்கும் கொஞ்சம் ‘டேஸ்ட்’ தேவைப்படுகிறது. கொசுக்கள் ‘O’ ரத்த பிரிவினரையே அதிகமாக விரும்புகின்றன என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ‘A’ ரத்த பிரிவினரை மிக குறைந்த அளவிலேயே கடிக்கிறதாம். இவற்றுடன், வியர்வை அதிகமாக வருபவர்களை கொசுக்கள் குறிவைத்து தாக்குமாம். நீங்க என்ன பிளட் குரூப்?

News April 15, 2025

பணவீக்கம் என்றால் என்ன?

image

நாம் வாங்கும் பொருள்களின் விலை ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உயருகிறது என்பது பணவீக்கமாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, நீங்கள் கடந்த ஆண்டு ₹100க்கு வாங்கிய ஒரு பொருள், இந்த ஆண்டு ₹105க்கு விற்றால் அதன் பணவீக்கம் 5% ஆகும். இந்தியாவில் 4% பணவீக்கம் என்பது சராசரியாக பார்க்கப்படுகிறது. அதற்கு அதிகம் போனால், மக்கள் வாங்கும் திறனை இழப்பார்கள். 4%ஐ விட குறைந்தால் நாட்டின் வளர்ச்சி தடைபடும்.

error: Content is protected !!