News April 9, 2025
இந்தியாவிற்கு அழைத்து வரப்படும் தீவிரவாதி

2008 மும்பை தீவிரவாதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, இன்று இரவு அல்லது நாளை காலை இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு கடத்துவதற்கு தடை கோரிய ராணாவின் மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிறப்பு விமானம் மூலம் அவர் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட உள்ளார். மும்பையில் லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 175 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News April 18, 2025
திமுக கூட்டணியில் சலசலப்பு

பொன்முடி மீது CM ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் என கூட்டணி கட்சி எம்பியான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஒரு பேராசியர் இப்படி மோசமாக பேசியிருக்க கூடாது. அவரின் கட்சி பதவியை மட்டும் பறித்தது பத்தாது என்பது பலரின் கருத்து. அது நியாயமான ஒன்றுதான். அதையே நானும் கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் பேச்சால் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 18, 2025
மீண்டும் தொடங்கும் ‘இந்தியன் 3 ’

கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், ‘இந்தியன் 3 ’ கிடப்பில் போடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், திடீர் திருப்பமாக Lyca நிறுவனம் அப்படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட சுபாஸ்கரன் இன்று மதியம் சென்னை வரவுள்ளார். இந்த சந்திப்பின்போது அன்பு & அறிவு இயக்கத்தில் ₹250 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள ‘KH 237’ படம் குறித்தும் கமல் பேச உள்ளாராம்
News April 18, 2025
விண்வெளி துறைக்கு க்ரீன் சிக்னல்.. TN அரசு சாதிக்குமா?

‘தமிழ்நாடு விண்வெளி கொள்கை 2025’ திட்டத்திற்கு CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும், தமிழ்நாட்டில் விண்வெளித் துறைக்கு தகுதியான பட்டதாரிகளையும், ஊழியர்களையும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.