News April 23, 2025

பயங்கரவாத தாக்குதல்: உதவி எண்களை அறிவித்த TN அரசு

image

காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ TN அரசு அவசர எண்களை அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல், வாட்ஸ்அப்) எண்களில் தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் காஷ்மீர் சென்று ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள CM உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 23, 2025

காஷ்மீர் தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்

image

ஜம்மு-காஷ்மீரின் பகல்ஹாமில் 28 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் பலியான 28 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய இபிஎஸ், தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

News April 23, 2025

2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

image

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா வழியே இந்தியாவுக்குள் இன்று தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். அப்போது எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்மூலம் அங்கு நடக்கவிருந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

வெளியான தீவிரவாதிகளின் வரைபடம்…

image

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரின் வரைபடங்களை NIA வெளியிட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவதர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலை வைத்து இந்த வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பஹல்காமை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!