News April 23, 2025
பயங்கரவாத தாக்குதல்: உதவி எண்களை அறிவித்த TN அரசு

காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ TN அரசு அவசர எண்களை அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல், வாட்ஸ்அப்) எண்களில் தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் காஷ்மீர் சென்று ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள CM உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 27, 2025
BREAKING: டிச.5-ல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

டிச.5-ம் தேதி (அடுத்த வெள்ளி) அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் கல்வித் தரம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, மாணவர்களுக்கான அரசுத் திட்டங்களை எடுத்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும்.
News November 27, 2025
எந்த நாடுகளில் அதிக முதலைகள் உள்ளன தெரியுமா?

முதலைகள், டைனோசர்களின் காலத்திலிருந்து பூமியில் வாழும் பழமையான உயிரினங்களில் ஒன்று. முதலைகள் பொதுவாக நன்னீர், உப்புநீர்(கடல்), சதுப்பு நிலங்கள் போன்ற நீர்நிலைகளில் வாழ்கின்றன. அவை சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், முதலைகள் எந்த நாடுகளில் அதிகளவில் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 27, 2025
விஜய் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை: நயினார்

தேர்தலில் நின்று விஜய் தனது செல்வாக்கையும், சக்தியையும் நிரூபிக்கட்டும் என்று நயினார் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் DMK Vs TVK என நகர்கிறதா என்ற கேள்விக்கு, விஜய் தற்போது தான் கட்சி ஆரம்பித்துள்ளார் என்றும், அவர் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை எனவும் விமர்சித்துள்ளார். எடுத்தவுடனேயே Long Jump, High Jump என உலகத்தை தாண்டுவேன் என்றால் அது எப்படி நடக்கும் என்று நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.


