News April 23, 2025
பயங்கரவாத தாக்குதல்: உதவி எண்களை அறிவித்த TN அரசு

காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ TN அரசு அவசர எண்களை அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல், வாட்ஸ்அப்) எண்களில் தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் காஷ்மீர் சென்று ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள CM உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 16, 2025
சட்டப்பேரவையில் எதிரொலித்த ‘கிட்னி திருட்டு’

சட்டப்பேரவையில் ‘கிட்னி திருட்டு’ விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை இபிஎஸ் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், ஏழை விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடிய ஹாஸ்பிடல் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிட்னி மட்டுமின்றி கல்லீரலும் திருடப்பட்டுள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News October 16, 2025
இந்த வடிவங்களின் செய்தி தெரியுமா?

டிராபிக் போர்டின் வடிவம் சொல்லும் செய்தி தெரியுமா? பொதுவாக இந்திய சாலைகளில் 3 வடிவிலான டிராபிக் போர்டுகள் உள்ளன ★சிவப்பு வட்டம்: இது உத்தரவு சின்னம். கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் ★சிவப்பு முக்கோணம்: இது எச்சரிக்கை சின்னம். பள்ளம் இருப்பது, ரயில் தண்டவாளம் உள்ளது போன்ற எச்சரிக்கைகளை கொடுக்கும் ★நீலம் அல்லது பச்சை நிற செவ்வகம்: இது தகவல் அளிக்கும் போர்டு. SHARE IT.
News October 16, 2025
Trump-ஐ பார்த்து பயப்படுகிறார் மோடி: ராகுல் காந்தி

Trump-ஐ பார்த்து மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இது குறித்த X பதிவில், ரஷ்ய எண்ணெய் வாங்குவது தொடர்பாக டிரம்ப் முடிவெடுக்கவும், அறிவிக்கவும் மோடி அனுமதிப்பதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் பற்றிய டிரம்ப் கருத்துக்கு இதுவரை PM மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.