News April 23, 2025

பயங்கரவாத தாக்குதல்: உதவி எண்களை அறிவித்த TN அரசு

image

காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ TN அரசு அவசர எண்களை அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல், வாட்ஸ்அப்) எண்களில் தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் காஷ்மீர் சென்று ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள CM உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 21, 2025

RAIN ALERT: 28 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

image

அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, செங்கை, சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூர், திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. உங்க ஊரில் இப்போ மழையா?

News November 21, 2025

ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு

image

திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆகஸ்டில் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடத்தியிருந்தது. அப்போது, இந்திராணி வீட்டில் 15 மணிநேரத்துக்கும் மேலாக ED சோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 21, 2025

மீனவ நண்பனாக திமுக அரசு செயல்படும்: CM ஸ்டாலின்

image

உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் உலக மீனவர் நாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவி, மீன்பிடித் துறைமுகங்கள் என மீனவர்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக திமுக அரசு தொடரும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!