News April 23, 2025
பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
Similar News
News February 3, 2026
ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி(57). பழக் கடை வியாபாரியான இவர், நேற்று(பிப். 2) இரவு பழக் கடையை மூடி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பழக் கடையில் வேலை செய்யும் அபிமன்யு என்பவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது தனியார் கம்பெனி வேன் மோதியதில் அபிமன்யு பலத்த காயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.
News February 3, 2026
சம்பளம் ₹2,000 உயர்கிறது.. இனிப்பான செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026-ம் ஆண்டின் தொடக்கமே இனிப்பான செய்தியுடன் தொடங்கியுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 58% இருந்து 63% ஆக உயரவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Pay) ₹40,000 என்று வைத்துக்கொண்டால், பழைய DA படி (58%) ₹23,200 இருக்கும் சம்பளம், புதிய DA (63%) படி ₹25,200 ஆக உயரும். இதன்மூலம் ₹2,000 வரை சம்பளம் அதிகமாக கிடைக்கும்.
News February 3, 2026
இரண்டாக உடைந்த TN காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன்

திமுக இன்றி தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது என FM நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளதாகவும், ஒரு தரப்பு தவெகவுடன் கூட்டணி அமைக்கவும், மற்றொரு தரப்பு திமுகவுடன் கூட்டணி அமைக்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். TN காங்கிரஸ் பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


