News April 23, 2025
பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
Similar News
News February 5, 2026
லோக்சபாவில் 22 ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவம்

PM உரை இல்லாமல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை பேச விடவில்லை என கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், PM உரை இல்லாமல் சபை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் சபை தொடங்கியவுடன் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், PM உரையின்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2004-ல் PM மன்மோகன் சிங்கை பாஜக நன்றி உரை தெரிவிக்கவிடாமல் செய்தது.
News February 5, 2026
நெருங்கும் தேர்தல் தேதி.. ECI முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, CEC ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் பிப்.11-ல் தமிழகம் வரவுள்ளனர். இதன்படி, சென்னையில் 2 நாள்கள் முகாமிட்டு தமிழக CEO அர்ச்சனா பட்நாயக், பொறுப்பு டிஜிபி, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ECI அறிவித்துள்ளது.
News February 5, 2026
4 வருஷமா டார்ச்சர் பண்றாங்க.. நடிகை ரவீனா ரவி வேதனை!

கடந்த 4 ஆண்டுகளாக சபரீஷ் மற்றும் அவரது சகோதரர் தன்னை தொந்தரவு செய்வதாக நடிகை ரவீனா ரவி பதிவிட்டுள்ளார். அவர்கள் அனுப்பிய அநாகரீகமாக மெசேஜ்ஜின் Screenshot-ஐ பதிவிட்டு, தன்னை மட்டுமின்றி வேறு சில நடிகைகளையும் இவர்கள் தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான நகரமான சென்னையில் இருக்கும் இவர்கள் மீது போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.


