News April 23, 2025

பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

image

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

Similar News

News January 29, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூட வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறும்பட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளர்.

News January 29, 2026

‘அரசுக்கல்லூரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை’

image

அண்ணா பல்கலை., கொடூரம் போல, சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் மற்றொரு மிருகத்தனமான சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி கேண்டீனில் பணிபுரியும் பெண்ணுக்கு, சமையல் மாஸ்டரான குணசேகர் மற்றும் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே காவலாளியிடம் அப்பெண் கூறியிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில், குணசேகரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

News January 29, 2026

காங்., அடுக்கிய டிமாண்ட்.. இவ்வளவும் வேண்டுமா?

image

கனிமொழி – ராகுல் சந்திப்பில் காங்., பல டிமாண்ட்களை அடுக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, 39 தொகுதிகள், து.சபாநாயகர் பதவி, 2 ராஜ்யசபா சீட், 5 வாரிய தலைவர்கள் பதவி, உள்ளாட்சி தேர்தலில் 20 சீட் வேண்டும் என காங்., கோரிக்கை வைத்துள்ளதாம். அத்துடன், ஒருவேளை தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் ‘ஆட்சியில் பங்கு’ தரவேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!