News April 23, 2025

பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

image

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

Similar News

News February 5, 2026

விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

image

வருமான வரித்துறையின் அபராத நோட்டீசுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை HC நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளது. 2015-ல் வெளியான ‘புலி’ படத்திற்கு பெற்ற வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை ₹1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் சென்னை HC நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

News February 5, 2026

அதிமுகவுடன் கூட்டணி.. இறுதியாக அறிவித்தார்

image

<<19058035>>அகில இந்திய பார்வர்டு பிளாக்<<>> கட்சியைத் தொடர்ந்து, மருது தேசிய கழகமும் அதிமுகவுடனான கூட்டணியை இன்று உறுதி செய்துள்ளது. அக்கட்சியின் நிறுவனர் மருது பாண்டியன், சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்பு தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் இச்சந்திப்பு நடந்துள்ளது.

News February 5, 2026

ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த மோடி

image

காங்கிரஸ் கட்சி சீக்கியர்களை அவமதிப்பதாக PM மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை ராகுல் காந்தி ‘<<19050653>>துரோகி நண்பா<<>>’ என அழைத்ததை சுட்டிக்காட்டி பேசிய மோடி, காங்கிரஸை விட்டு வெளியேறிய வேறு யாரையும் துரோகி என அழைக்காத இளவரசர் (ராகுல்), ரவ்னீத் சிங் சீக்கியர் என்பதால் அவமதித்ததாகவும், சீக்கியர் மீதான காங்கிரஸின் வெறுப்புக்கு இதுவே ஆதாரம் எனவும் கடுமையாக தாக்கினார்.

error: Content is protected !!