News April 23, 2025
பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
Similar News
News February 14, 2026
3 நாளில் 10,000 ஆணுறைகள் காலி…

இத்தாலியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கிய 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1988-ல் சியோல் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, எய்ட்ஸ் நோய் பரவியதை அடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் குறைவாக வழங்கியதே காலியானதற்கு காரணம் என்றும், தற்போது கூடுதலாக வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 14, 2026
டெல்லிக்கு அடிமையாய் இருந்த காலம் போய்விட்டது: அமித்ஷா

இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி டெல்லிக்கு அடிமையாக இருந்தது என அமித்ஷா விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது இருக்கும் NDA கூட்டணி அரசு சுதந்திரமாக இயங்கி வருவதாக கூறிய அவர், டெல்லிக்கு அடிமையாய் இருந்த காலம் போய்விட்டது என கூறியுள்ளார். மேலும், புதுச்சேரியில் ரங்கசாமி சிறப்பான ஆட்சியை நடத்துகிறார் எனவும் வரும் தேர்தலில் 24 இடங்களை வெல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 14, 2026
அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா.. டிடிவி UPDATE

NDA(அதிமுக) கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாக TTV தினகரன் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் OPS, சசிகலா ஆகியோர் கூட்டணியில் இணைவார்களா எனக் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், அதிமுக ஒன்றிணைய வேண்டும், அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் தங்கள் கூட்டணியில் இருப்பார்கள் என சூசகமாக பதில் அளித்துள்ளார்.


