News April 23, 2025
பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
Similar News
News December 12, 2025
ஏலக்காயின் நன்மைகள்

ஏலக்காய் வெறும் வாசனை மற்றும் சுவை தரும் மசாலா பொருள் மட்டுமல்ல, பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்று. இதனை, சூடான பால், தேநீர் ஆகியவற்றில் சேர்த்தோ அல்லது உணவுக்குப் பிறகு மென்றோ சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 12, 2025
U-19 ஆசியக்கோப்பை: முதல் போட்டியில் IND vs UAE மோதல்

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று UAE-ல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள் என மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. துபாயில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா vs UAE மோதுகின்றன. காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. செமிஃபைனல் வரும் 19-ம் தேதியும், ஃபைனல் வரும் 21-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
குடியுரிமையை பரிசோதிக்கும் ECI: திருமாவளவன்

SIR-ன் போது ECI கேட்கும் 13 ஆவணங்கள் குடியுரிமையை பரிசோதிக்கும் ஆவணங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி செயல்படக்கூடிய ECI-க்கு, ஒரு வாக்காளரின் குடியுரிமையை சோதிக்க அதிகாரம் இல்லை. எனவே இதை உடனே நிறுத்த வேண்டும். குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்பு சட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


