News April 23, 2025
பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
Similar News
News December 29, 2025
கர்ப்பிணிகளுக்கு ₹11,000 உதவித்தொகை!

கர்ப்பிணி பெண்களுக்கு ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ திட்டத்தின் கீழ் ₹11 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ₹5,000, 2-வது குழந்தைக்கு ₹6,000 வழங்கப்படுகிறது. ஆனால், 2-வது குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். முதல் குழந்தை கருவுற்றது முதல் பிறக்கும் வரை 3 தவணை முறைகளில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. முழு தகவலை அறிய & விண்ணப்பிக்க <
News December 29, 2025
Handshake விவகாரம்: மீண்டும் இந்தியாவை சீண்டும் PAK

ஆசிய கோப்பையை தொடர்ந்து சமீபத்தில் நடந்த U-19 போட்டியிலும் PAK உடன் இந்திய அணி HandShake செய்யவில்லை. இது சர்ச்சையான நிலையில், எங்களுக்கும் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசை இல்லை என PSB Chief மோசின் நக்வி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த நடைமுறை இனி வரும் போட்டிகளிலும் தொடரும் எனவும், இந்தியா செய்வதை எல்லாம் செய்துவிட்டு நாங்கள் பின்வாங்க வேண்டும் என நினைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
News December 29, 2025
செளமியா அன்புமணியின் பதவியில் காந்திமதி

பசுமைத் தாயகம் அமைப்பில் இருந்து செளமியா அன்புமணியை நீக்கி, சேலத்தில் நடைபெற்று வரும் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமைத் தாயகம் அமைப்பின் புதிய தலைவராக காந்திமதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் பாமக செயல்தலைவராக செயல்படுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மே 28 உடன் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததாகவும் பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.


