News April 8, 2025
பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு டக்கு சுமத்ரா தீவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து, அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மக்கள், சாலையில் தஞ்சமடைந்தனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
Similar News
News April 17, 2025
ஜனநாயக உரிமைகளை மதிக்காத போலீஸ்: அன்புமணி

அறவழியில் போராட்டம் நடத்திய பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் வைத்துள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டிய அவர், அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும்; அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது. கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
News April 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 309 ▶குறள்: உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். ▶பொருள்: உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
News April 17, 2025
டிடிவி உடன் இணக்கமாக செல்லும் இபிஎஸ்?

2026 சட்டப்பேரவைத் தேர்தல் சூடு ஆரம்பித்துள்ள நிலையில் டிடிவிக்கு எதிரான வழக்கை EPS வாபஸ் பெற்றுள்ளார். சமீபத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்தது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்த TTV, OPS நிலை என்ன ஆகும் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், தென்மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை குறிவைத்து, டிடிவி உடன் இணக்கமாக செல்ல முடிவெடுத்து, இபிஎஸ் வழக்கை வாபஸ் வாங்கியதாக கூறப்படுகிறது.