News March 9, 2025

சிரியாவில் பயங்கர மோதல்: 2 நாட்களில் 600 பேர் பலி!

image

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்கிறது. கடந்த 2 நாட்களில் பாதுகாப்புப் படையினருக்கும், முன்னாள் அதிபர் பஷார் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 600 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பிரிவினரிடையே மோதல் தொடங்கியதில் இருந்து நடந்த மிக மோசமான வன்முறை இதுவாகும். தெருக்களிலும் கட்டிடங்களிலும் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. பனியாஸ் நகரத்தில்தான் இறப்பு எண்ணிக்கை அதிகம்.

Similar News

News March 9, 2025

ஹோலி அன்று மசூதி போக வேண்டாம்: யோகி ஆதித்யநாத்

image

ஹோலி பண்டிகை மார்ச் 14-ல் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு உ.பி. சம்பலை சேர்ந்த காவல் அதிகாரி அனுஷ் சவுத்ரி கூறி இருந்தார். ‘வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும், ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை தான் ஹோலி வரும்’ என அவர் தெரிவித்தார். அவரது கருத்துக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

என்னை சிக்க வைத்துவிட்டனர்: கோர்ட்டில் கதறிய நடிகை

image

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது கதறி அழுதார். நான் எப்படி இந்த விவகாரத்துக்குள் வந்தேன் என இப்போது வரை புரியவில்லை; நான் இந்தக் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டு விட்டேன். என்னால் தூங்கவே முடியவில்லை என கோர்ட்டில் வழக்கறிஞர்களிடம் கூறி கதறி அழுதார். துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 9, 2025

முதல் விக்கெட்டை வீழ்த்திய வருண்

image

Champions Trophy தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது. தொடக்கத்தில் மெதுவாக விளையாடிய நியூசி., 3 ஓவருக்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் அதிரடி காட்ட ஆரம்பித்த வில் யங், ரச்சின் ரவிந்திரா 7.4 ஓவரில் 57 ரன்கள் குவித்தனர். விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்தியா திணறியது. ஆனால், வருண் சக்ரவர்த்தி வீசிய 7 ஓவரின் 5வது பந்தில் யங் 15 ரன்களில் அவுட் ஆகி நடையை கட்டினார்.

error: Content is protected !!