News March 18, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; இருவர் சம்பவ இடத்தில் மரணம் 

image

துவரங்குறிச்சி அடுத்த முக்கன் பாலம் அருகே இன்று மாலை திருச்சி நோக்கி சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News November 26, 2025

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 26, 2025

திருச்சி: வாகனம் ஏலம் அறிவிப்பு – கலெக்டர்

image

திருச்சி மகளிர் சிறையில் பயன்படுத்தப்பட்ட டெம்போ ட்ராவலர் வேன் வரும் டிச.11-ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் டிச.9-ம் தேதி வாகனத்தை பார்வையிட்டு கொள்ளலாம். ஏலம் நடைபெறும் தினத்தன்று ரூ.5000 முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் முடிந்த பின் உரிய தொகையுடன், வரிகளை செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

திருச்சி: லஞ்சம் வாங்கிய விஏஓ-க்கு சிறை!

image

முசிறி, கீழத்தெருவைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் என்பவர் ரூ.700 லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் உறுதிசெய்யப்பட்டதால் விஏஓ செல்வராஜுக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!