News March 18, 2024
திருச்சி அருகே பயங்கர விபத்து; இருவர் சம்பவ இடத்தில் மரணம்

துவரங்குறிச்சி அடுத்த முக்கன் பாலம் அருகே இன்று மாலை திருச்சி நோக்கி சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 1, 2025
திருச்சி: டூவீலரில் இருந்து விழுந்து பரிதாப பலி

திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் வீரமணி (26). இவருக்கு ஒரு மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீரமணி தன் தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கபதற்காக திருவெறும்பூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது திருவெறும்பூர் ரயில்வே பாலம் அருகே டூவீலரில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 30, 2025
திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், லால்குடி பகுதி கல்லக்குடி 43.4 மில்லி மீட்டர், லால்குடி 38.4 மில்லி மீட்டர், புள்ளம்பாடி 61.6 மில்லி மீட்டர், தேவி மங்கலம் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், சமயபுரம் 44 மில்லி மீட்டர், சிறுகுடி 30 மில்லி மீட்டர், நாவலூர் கொட்டுப்பட்டு 16.5 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
News November 30, 2025
திருச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


