News May 7, 2025
இந்தியா அதிரடியால் பாகிஸ்தானில் பதற்றம்..

பாக்.,கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராஜஸ்தான் எல்லையில் விமானப்படை அதிரடி சோதனைகளை செய்து வருகிறது. ஏற்கெனவே பாக். அமைச்சர் அத்தாவுல்லா தரார், அடுத்த 24 – 36 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
Similar News
News November 20, 2025
பிரபல நடிகை பிரதியுஷா மரணம்.. பரபரப்பு தகவல்

தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரதியுஷாவின் மரணம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காதலன் சித்தார்த் உடன் 2002-ல் விஷம் குடித்து அவர் உயிரிழந்தார். ஆனால், காதலன் உயிர்பிழைத்தார். இதுதொடர்பான SC வழக்கில், தான் குற்றமற்றவர் என சித்தார்த் வாதிட்டார். ஆனால், தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதே அவர்தான் என பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
News November 20, 2025
கூட்டணி ரூட்டை மாற்றுகிறாரா விஜய்?

கொள்கை எதிரி பாஜக உடன் கூட்டணி கிடையாது என கூறிவந்த விஜய், தற்போது NDA கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பிஹார் தேர்தலில் PK-வின் கட்சி மரண அடி வாங்கியதால், நாமும் தனித்து போட்டியிட்டால் படுதோல்வி அடைவோமோ என விஜய் யோசிக்கிறாராம். ஒருவேளை அதிமுக கூட்டணியில் இணைந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் தவெக வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
News November 20, 2025
மீண்டும் புயல் சின்னம்… கனமழை வெளுக்கப் போகுது!

வங்கக் கடலில் நவ.22-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அது 2 நாள்களில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் IMD கணித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை அரியலூர், கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கவனமாய் இருங்கள்!


