News May 7, 2025
இந்தியா அதிரடியால் பாகிஸ்தானில் பதற்றம்..

பாக்.,கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராஜஸ்தான் எல்லையில் விமானப்படை அதிரடி சோதனைகளை செய்து வருகிறது. ஏற்கெனவே பாக். அமைச்சர் அத்தாவுல்லா தரார், அடுத்த 24 – 36 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
Similar News
News December 1, 2025
BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (டிச.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹10.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,739.50-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
News December 1, 2025
அதிமுக எங்களை ஏமாற்றவில்லை: பிரேமலதா

ராஜ்யசபா MP விவகாரத்தில் அதிமுக தேமுதிகவை ஏமாற்றவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். அதிமுகவிடம் MP பதவியை 2025-ல் கேட்டதாக கூறிய அவர், அதிமுகவில் இருந்து 2026-ல் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், MP சீட் விவகாரத்தை அதிமுக ஏமாற்றிவிட்டதாக பேசி வந்த இவர், இப்படி அந்தர் பல்டி அடித்திருப்பது கூட்டணி கணக்குக்கு தானா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News December 1, 2025
டிரம்ப் – மதுரோ போன் கால்: நீடிக்கும் பதற்றம்

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுடன், தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உரையாடலின் முழு விவரங்களை வெளியிட மறுத்த டிரம்ப் ‘பேச்சுவார்த்தை நன்றாக நடந்தது என சொல்ல மாட்டேன். அதேநேரம் மோசமாகவும் நடக்கவில்லை. அது ஒரு வெறும் தொலைபேசி அழைப்பு’ என்று மட்டும் கூறியுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே <<18429070>>போர் பதற்றம்<<>> தொடர்ந்து நீடித்தே வருகிறது.


