News May 7, 2025
எல்லையில் பதற்றம்.. பாக்., NSA ஆக ISI தலைவர் நியமனம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு நீடித்து வரும் நிலையில், பாக்., பாதுகாப்பு ஆலோசகராக ISI லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் பாகிஸ்தான் இந்த மாற்றத்தை செய்துள்ளது. இரு நாடுகளிடையே தொடர்ந்து 7-வது நாளாக பதற்றம் நீடிக்கிறது. மத்திய அரசு பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் நேற்று <<16264690>>மாற்றம்<<>> செய்த நிலையில், பாக்., இதனை செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News October 16, 2025
BREAKING: பண்டிகை விடுமுறை.. நாளை முதல் தொடங்குகிறது

தீபாவளியையொட்டி மேலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – செங்கோட்டை, எழும்பூர் – மதுரை, மதுரை – தாம்பரம் இடையே நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியுள்ளது. IRCTC செயலி, இணையதளத்தில் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT.
News October 16, 2025
தீபாவளி.. மதுப்பிரியர்களுக்கு HAPPY NEWS

தீபாவளியையொட்டி மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகம் விற்பனையாகும் மது வகைகளின் இருப்பை கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வழக்கத்தைவிட மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
ஐசிசி விருது: தட்டி தூக்கிய அபிஷேக், ஸ்மிருதி மந்தனா

ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா தட்டிச் சென்றுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா 314 ரன்கள் குவித்து ஐசிசி டி-20 தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறிய நிலையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அதே போல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் 2 சதங்கள் விளாசிய ஸ்மிருதி மந்தனா செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை பெற்றுள்ளார்.