News March 16, 2024

தென்காசி கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் (துப்பாக்கி) உரிமம் பெற்ற அனைத்து உரிமதாரர்களும் , தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற படைக்கலனை (துப்பாக்கியை) அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாமல் உடனடியாக ஒப்படைக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News April 21, 2025

டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

image

திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி முனியாண்டி – பெரியநாயகி (48). இவா்கள் ஜெயபால் என்பவருடன் சோ்ந்து தென்காசி மாவட்டம் ராயகிரியில் கரும்பு அரைவை ஆலை நடத்தி வருகின்றனா். இத்தம்பதி டிராக்டரில் கரும்பு ஏற்றுவதற்காக சென்றனர். அப்போது வேகத்தடையில் டிராக்டா் ஏறி இறங்கியபோது, பெரியநாயகி தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

News April 21, 2025

தென்காசி மாவட்ட ரோந்து பணி விபரம்

image

தென்காசி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஏப்.20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்களை அவசர உதவிக்கு அழைக்கலாம் என்றும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்களும் பதிவிடப்பட்டுள்ளன.

News April 20, 2025

தென்காசி: ஆப்டிகல் டிக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆப்டிகல் டிக்னீசியன் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி மே.31. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு Share செய்து உதவிடுங்கள்.

error: Content is protected !!