News March 17, 2024
தென்காசி: 2,220 ஆண்டு பழமை வாய்ந்த பானை!

தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
Similar News
News December 4, 2025
தென்காசி: கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள்

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி காசிநாதபுரத்தில் சாமி கும்பிடுவதில் வரி வசூல் செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மணிவேல் என்பவர் 2015-ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஊர்தலைவர் விநாயகம், உலகநாதன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
News December 4, 2025
புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாட்டில் தனித்துவமான வேளாண் பொருட்களை கண்டறிந்து அவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. புளியங்குடி (தென்காசி) எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, செட்டிகுளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை ஆகிய 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.


