News March 14, 2025
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்: புதின் ஏற்பு

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில், முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் உடன்பாடு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அதனை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, புதின் சம்மதிப்பார் என டிரம்ப் கூறியிருந்தார்.
Similar News
News March 14, 2025
சிமெண்ட் விலை உயர்வு?

சிமெண்ட் நிறுவனங்கள் வெட்டியெடுக்கும் சுண்ணாம்புக்கல் மீது 1 டன்னுக்கு ₹160 தமிழக அரசு கூடுதல் வரியாக விதித்துள்ளதால், சிமெண்ட் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி விதிப்பானது வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. சுண்ணாம்புக்கல்லுக்கு ஏற்கெனவே ராயல்டி வசூலிப்பதுடன், கூடுதலாக வரியும் விதிப்பதால் தங்கள் செலவு அதிகரிக்கும் என சிமெண்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
News March 14, 2025
பெண்களுக்கு 1% கட்டண சலுகை

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால், 1% கட்டண சலுகை வழங்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ₹225 கோடியில், ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கோவை, திருச்சி, மதுரை, தாம்பரம், ஆவடியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய CCTV கேமராக்கள் பொருத்தப்படும். 150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 14, 2025
5 லட்சம் பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா

நடப்பாண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கான அளவீடு, 10 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக கூறிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். அரசின் இந்த அறிவிப்பு, வீட்டுமனை பட்டாவுக்காக காத்திருப்போருக்கு நிம்மதியை தந்துள்ளது.