News March 25, 2025
ராகு தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்

திருமணஞ்சேரி திருத்தலம் திருமண தடைகளை நீக்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய அது நீங்கும். மேலும், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
Similar News
News December 13, 2025
2 போட்டிகளை வைத்து கில்லை எடை போட முடியாது: நெஹ்ரா

SA-க்கு எதிரான டி20 தொடரில் கில் சொதப்பி வருகிறார். இது குறித்து GT கோச் நெஹ்ராவிடம் கேட்டபோது, டி20 போன்ற மிக குறுகிய ஃபார்மெட்டில், 2 போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு வீரரை எடை போட கூடாது என தெரிவித்துள்ளார். கில் சரியாக ஆடவில்லை என சாம்சன், அவரும் ஆடவில்லை என ருதுராஜ் என வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.
News December 13, 2025
₹1,020 கோடி ஊழல்.. “நேரு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்”

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் ₹1,020 கோடி ஊழலும், அரசுப் பணி வழங்க ₹888 கோடி லஞ்சமும் வசூலிக்கப்பட்டது பற்றி DGP-க்கு, ED துல்லியமான ஆதாரங்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சாடியுள்ளார். ஊராட்சி செயலாளர் தேர்விலும், DMK அரசு தகுதியான இளைஞர்களை நீக்கி மோசடி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் கைது

2023-ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகம்மாடியை ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதால் முகம்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காக போராடி 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த முகம்மாடி, கடந்த 2024-ல் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.


