News March 25, 2025
ராகு தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்

திருமணஞ்சேரி திருத்தலம் திருமண தடைகளை நீக்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய அது நீங்கும். மேலும், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
Similar News
News December 10, 2025
EPS உடன் செங்கோட்டையன்… கடைசி PHOTO

அதிமுகவின் முதல் பொதுக்குழுவை நடத்தி, எம்ஜிஆரிடம் பாராட்டை பெற்றவர் செங்கோட்டையன். 50 ஆண்டுகால அரசியலில் அவர் இல்லாமல் ஒரு அதிமுக பொதுக்குழு கூட இதுவரை நடந்ததே இல்லை. தற்போது கட்சி மாறிவிட்டதால், இன்று நடக்கும் பொதுக்குழுதான் அவர் இல்லாமல் நடக்கும் முதல் பொதுக்குழுக் கூட்டம். இந்நிலையில், EPS உடன் அவர் (KAS) கடைசியாக பங்கேற்ற பொதுக்குழுவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
News December 10, 2025
அதிமுக உடன் கூட்டணி இல்லையா?

ADMK பொதுக்குழுவில் துரோகிகளால் ஆட்சியை இழந்ததாக OPS உள்ளிட்டோரை மறைமுகமாக குறிப்பிட்டு சி.வி.சண்முகம் பேசியதை கைதட்டி EPS வரவேற்றார். இதன் மூலம் இருவரையும் கூட்டணியில் இணைக்க அவர் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அதேநேரம் இருவரையும் கூட்டணியில் மீண்டும் இணைக்க, டெல்லியில் அண்ணாமலை முகாமிட்டுள்ளார். இதனால், இருவரும் கூட்டணியில் இணைவார்களா, இணையமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News December 10, 2025
SIR படிவம் சமர்ப்பிக்க நாளையே கடைசி!

SIR படிவத்தை சமர்பிக்க நாளை, டிசம்பர் 11-ம் தேதியே கடைசி நாள். உடனே உங்கள் பகுதியின் BLO-வை அணுகி, படிவத்தை பூர்த்தி செய்து அவரிடம் சமர்ப்பியுங்கள். தமிழ்நாட்டில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உங்கள் படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதா என அறிய <


