News March 25, 2025
ராகு தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்

திருமணஞ்சேரி திருத்தலம் திருமண தடைகளை நீக்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய அது நீங்கும். மேலும், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
Similar News
News December 18, 2025
சபரிமலையில் இதுவரை ₹210 கோடி வருமானம்

சபரிமலையில் நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடை திறந்து இதுவரை ₹210 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் ₹106 கோடி கிடைத்துள்ளதாகவும், மொத்த வருவாய் கடந்த ஆண்டைவிட 30% அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. தங்கும் அறைகளுக்கு முன்பணம் செலுத்திய பக்தர்கள் அதனை பெற தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
News December 18, 2025
வரலாற்றில் இன்று

*1822 – தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர் பிறந்தநாள்.
*1856 – நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் பிறந்தநாள்.
*2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.
*2006 – ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
News December 18, 2025
தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை மாஃபியா: HC

கனிமவள கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை HC-ன் உத்தரவுபடி TN அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசியல், பணபலத்தை வைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தமிழகத்தில் மாஃபியா போல் செயல்படுவதாக கோர்ட் தெரிவித்தது. மேலும் ₹5 கோடிக்கு கனிமவளம் கொள்ளையடிப்படும் நிலையில், ₹5 லட்சம் அபராதம் விதிப்பதில் என்ன பயன் என்றும் HC கேள்வி எழுப்பியுள்ளது.


