News March 25, 2025
ராகு தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்

திருமணஞ்சேரி திருத்தலம் திருமண தடைகளை நீக்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய அது நீங்கும். மேலும், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
Similar News
News December 9, 2025
கோல்டன் குளோப்ஸ் ஃபீவர் ஸ்டார்ட் ஆனது!

2026 கோல்டன் குளோப்ஸ் பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த இயக்குநர், நடிகர் என 9 பிரிவுகளில் டிகாப்ரியோவின் ‘One Battle After Another’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நார்வே படமான ‘Sentimental Value’ 8, ஹாலிவுட் படமான ‘Sinners’ 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11-ம் தேதி, ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் இந்த சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
News December 9, 2025
கோவா தீ விபத்து: இண்டர்போல் உதவியை நாடும் போலீஸ்

கோவா <<18500834>>இரவு விடுதி தீ விபத்தில்<<>> 25 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த சில மணி நேரத்தில் விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடிய கௌரவ் மற்றும் சவுரப்பை பிடிக்க, இண்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இதற்கிடையே, இவர்களுக்கு சொந்தமான இன்னொரு விடுதி ஒன்று, அரசு நிலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
News December 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 544 ▶குறள்: குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. ▶பொருள்: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.


