News April 18, 2025
கோயில் ஓய்வூதியதாரர்களுக்கு இனி ரூ.2,000 கருணைத் தொகை

கிராம கோயில் பூசாரிகளுக்கு பைக் வாங்க அரசு ரூ.12,000 மானியம் வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கிராம கோயில் பூசாரிகள், ஆதிதிராவிட கோயில் அர்ச்சகர்கள் 10,000 பேருக்கு பைக் வாங்க தலா ரூ.10,000 மானியம் தரப்படும் என்றார். கோயில் ஓய்வூதியதாரர்களுக்கு தரப்படும் பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படுதாகவும் அவர் கூறினார்.
Similar News
News November 23, 2025
6 ஆண்டுகளுக்கு பின் சதம்… முத்துசாமியின் சாதனை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், இன்று SA பேட்ஸ்மேன் முத்துசாமி, தனது முதல் சதத்தை(109) அடித்தார். இதன்மூலம், 6 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவில் 7 (அ) அதற்கு அடுத்த நிலையில் இறங்கி சதம் அடித்த முதல் SA வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடைசியாக 2019-ல் டி காக் இந்தியாவில் சதம் அடித்தார். மேலும், இந்தியா, பாக்., வ.தேசம் நாடுகளில் 50+ ரன்கள் குவித்த 4-வது SA வீரராகவும் முத்துசாமி சாதித்துள்ளார்.
News November 23, 2025
SIR ஒரு திட்டமிட்ட சதி: ராகுல் காந்தி

SIR என்பது ஒரு சீர்திருத்தம் அல்ல, அது ஒரு திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். 16 BLO-க்கள் உயிரிழந்ததை X-ல் சுட்டிக்காட்டி, SIR என்ற திட்டமிட்ட சதியால் வாக்காளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், தேவையற்ற அழுத்தத்தால் BLO-க்கள் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார். SIR-ன் நோக்கம் சரியாக இருந்திருந்தால் EC போதுமான அவகாசம் எடுத்து அதை செயல்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 23, 2025
அஜித்தை பாராட்டிய செல்வப்பெருந்தகை

கார் ரேஸிங்கில் விருதுகளை குவித்துவரும் அஜித்துக்கு, <<18364909>>GENTLEMAN DRIVER OF THE YEAR 2025<<>> விருது மேலும் ஒரு மகுடமாக அமைந்திருக்கிறது. அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை, தன்னம்பிக்கை, கடின உழைப்புதான் வெற்றியின் அடித்தளம் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருப்பதாக பாராட்டியுள்ளார். அஜித்தின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


