News April 16, 2025
அடுத்த 3 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 – 37 டிகிரி செல்சியஸ் இருக்கும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 16, 2025
பாஜக-அதிமுக கூட்டணியில் திடீர் விரிசல்?

சென்னையில் அண்மையில் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சியமைக்கும் எனக் கூறியிருந்தார். இதன்மூலம் அதிமுக அமைச்சரவையில் பாஜகவும் இடம்பெறும் என கூறியிருந்தார். இதனால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்த நிலையில் இன்று பேசிய இபிஎஸ், அதிமுக அரசில் பாஜகவுக்கு இடமில்லை எனக் கூறினார். இது பாஜக, அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News April 16, 2025
1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரிப்பு

1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரித்துள்ளது. ஜன.1-ல் 1 கிராம் ₹7,150ஆகவும், 1 சவரன் ₹57,200ஆகவும் விற்கப்பட்டது. பிப். 1-ல் 1 கிராம் ₹7790, 1 சவரன் ₹62,320-ஆக விற்கப்பட்டது. மார்ச் 1-ல் 1 கிராம் ₹7,940, 1 சவரன் ₹63,520ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் ₹8,815, 1 சவரன் ₹70,520ஆக அதிகரித்துள்ளது. படிப்படியாக விலை அதிகரித்து தங்கம் புதிய உச்சம் தொட்டுள்ளது.
News April 16, 2025
சென்னைவாசிகளே குடையோடு போங்க…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஈரோடு, சேலம், தர்மபுரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.