News February 13, 2025
2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.. IMD எச்சரிக்கை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738813320348_1241-normal-WIFI.webp)
தமிழகத்தில் நாளை வெப்பம் அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் IMD கூறியுள்ளது. இதேபோல், வருகிற 15ஆம் தேதியும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2- 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் வெப்பம் எப்படி? கீழே பதிவிடுங்க.
Similar News
News February 14, 2025
BOY FRIEND-ஆல் நேர்ந்த துயரம்: ஐஸ்வர்யா ராஜேஷ்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739466965215_1204-normal-WIFI.webp)
முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கடந்தகால மோசமான அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சிறு வயதிலேயே அப்பா இறந்ததால், அம்மாவுடன் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் எனக்கு வந்தது. இளம் வயதில் ஒருவன் எனக்கு நண்பனாக வந்தான். அவனால் அதிக துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவன் கொடுத்த வலியால், எனக்கு காதல் வயப்பட இப்போதும் கூட பயமாக இருக்கிறது என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
News February 14, 2025
சங்பரிவார் ஸ்டாலின்… ஜெயக்குமார் பாய்ச்சல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737101337828_1153-normal-WIFI.webp)
CM ஸ்டாலினை, சங்பரிவார் ஸ்டாலின் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் ‘தொடரும் சாதியக் கொடுமைகள், தூங்கும் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், இன்னும் எத்தனை சாதியக் கொடுமைகளை எத்தனை வடிவங்களில் TN சந்திக்க போகிறது. கூட்டணிக் கட்சிகளின் வாய்களை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே முழு முயற்சி எடுக்கிறார் சங்பரிவார் ஸ்டாலின் என சாடியுள்ளார்.
News February 14, 2025
சீமான் மீதான விஜயலட்சுமி வழக்கு: பிப்.19இல் தீர்ப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739451525125_1204-normal-WIFI.webp)
சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த பாலியல் வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து வந்த நிலையில், இதை ரத்து செய்யக்கோரி சீமான் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றைய தினமே தீர்ப்பு அளிக்கப்படும் என சென்னை ஐகோர்ட் இன்று அறிவித்தது.