News April 8, 2024

14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது

image

தமிழகத்தில் இன்று 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. சேலம் – 41.7 டிகிரி செல்சியஸ்(dC), ஈரோடு – 41.6 dC, திருப்பத்தூர் – 41.4 dC, திருச்சி – 40.7 dC, நாமக்கல் – 40 dC, மதுரை – 41.2 dC, கரூர் பரமத்தி – 41 dC, தருமபுரி – 40.7 dC, கோவை – 38.9 dC, பாளையங்கோட்டை – 38.8 dC மற்றும் தஞ்சை, திருத்தணி, வேலூர், மதுரை ஏர்போர்ட்டில் தலா 39.6 dC வெப்பம் பதிவாகியுள்ளது.

Similar News

News November 5, 2025

‘Sorry அம்மா.. நான் செத்துப் போறேன்’

image

CA தேர்வில் தோல்வியடைந்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த அகில் வெங்கட கிருஷ்ணா (29) என்ற மாணவர், தனது பெற்றோருக்கு உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘நான் உங்களை ஏமாற்றிவிட்டேன். இனி நான் வாழத் தகுதியற்றவன், என்னை மன்னித்து விடுங்கள்’ என கடிதம் எழுதி எழுதியுள்ளார். பின்னர், நேற்று இரவு முகத்தில் பிளாஸ்டிக் கவரைச் சுற்றிக் கொண்டு ஹீலியம் வாயுவை சுவாசித்து உயிரிழந்துள்ளார்.

News November 5, 2025

வாக்கு திருட்டில் ஈடுபட்டாரா பாஜக நிர்வாகி?

image

உ.பி அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் இருக்கும் தால்சந்துக்கு ஹரியானா & உ.பி என 2 மாநிலத்திலும் வாக்குகள் உள்ளது என்பதை ராகுல் அம்பலப்படுத்தியுள்ளார். தால்சந்தின் மகன் யஷ்வீருக்கும் உ.பி மதுராவிலும் ஹரியானாவில் ஹோடல் தொகுதியிலும் வாக்கு இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதேபோல ஆயிரக் கணக்கானோருக்கு உ.பி, ஹரியானா என 2 மாநிலங்களிலும் வாக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

ஒரு வீட்டில் 501 வாக்காளர்களா? கேள்விகளை அடுக்கிய ராகுல்

image

2-க்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் EC-யிடம் உள்ள நிலையில், அதை ஏன் பயன்படுத்தவில்லை என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். EC வேண்டுமென்றே இவற்றை சரிபார்க்கவில்லை என்ற அவர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பொய் சொல்வதாக குற்றம்சாட்டினார். ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாக பதிவில் இருக்க, அங்கு சென்று பார்த்தால் யாரும் இல்லை எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!