News November 12, 2024
தெலுங்கு மக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே: ஹைகோர்ட்

தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்து தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, மதுரை ஹைகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, தெலுங்கர்கள் வந்தவர்கள் அல்ல; அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியினர் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
Similar News
News August 25, 2025
ஸ்டாலின் வருகையால் பிஹார் முன்னேறி விடுமா? PK

வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி பிஹாரில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரையில், வரும் 27-ம் தேதி CM ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பிஹாருக்கு தமிழக CM வருவதால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பிஹார் முன்னேறிவிடுமா என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் பிரச்னைகளுக்கு இங்குதான் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
செல்ஃபிக்குள் மூழ்கிப்போன கீர்த்தி ஷெட்டி

விஜய்சேதுபதியின் நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், தமிழிலும் இப்போது பிஸியாக உள்ளார். இதற்கு இடையில் இன்ஸ்டாவில் தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதை கீர்த்தி மறப்பதில்லை. சமீபத்தில் முகத்தை செல்போனால் மறைத்தபடி, அவர் பகிர்ந்துள்ள செல்பி போட்டோக்களால் இளசுகள் சொக்கிப்போயுள்ளனர்.
News August 25, 2025
திமுகவை ஆதரிக்க வேண்டிய தேவை உள்ளது: அமீர்

ஆணவ கொலைக்கு எதிரான சட்டத்தை திமுக கொண்டுவர வேண்டும் என இயக்குநர் அமீர் வலியுறுத்தினார். மேலும், திமுகவை எதிர்த்துதான் பொதுவாழ்க்கைக்கு வந்ததாக குறிப்பிட்ட அமீர், இன்றைய காலகட்டத்தில் திமுகவை ஆதரிக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறியுள்ளார். சனாதனத்தை எதிர்த்து போராட வேண்டிய தேவை உள்ளதால் திமுக தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.