News September 13, 2024

திரும்பி வந்துட்டேனு சொல்லு..!

image

சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, சென்னை அடுத்த மறைமலை நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஆலையை ஃபோர்டு நிறுவனம் மூடியது. இந்நிலையில், ஏற்றுமதிக்கான கார்கள் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 3, 2025

குழந்தைகளுக்கு Non-Veg எப்போது கொடுக்கலாம்?

image

அசைவ உணவுகள் சத்து நிறைந்தவை என்றாலும் அதை எப்போது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என சில பெற்றோருக்கு தெரிவதில்லை. குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு சரியாக செரிமானம் ஆகாது என்பதால் தாய்ப்பால் தவிர எதுவும் கொடுக்கக்கூடாது. இதன்பின் அவர்களுக்கு அசைவ உணவுகளை கொடுக்கலாம். முதலில் சூப், வேகவைத்து மசித்த கறி ஆகியவற்றை மட்டும் கொடுங்கள். அதீத காரம், உப்பு சேர்க்கவேண்டாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News December 3, 2025

BREAKING: நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கையை அடுத்து நாளை (டிச.4) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2025

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக: இன்பதுரை

image

டிட்வா புயல் & மழை வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக MP இன்பதுரை ராஜ்யசபாவில் குற்றம் சாட்டினார். விவசாய நிலங்கள் மொத்தமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பருவமழை காலத்திற்கு முன்பே வாய்க்கால்களை தூர்வார EPS பலமுறை வலியுறுத்தியும், அதை செய்ய திமுக அரசு தவறிவிட்டது என சாடிய அவர், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை உடனே கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!