News September 13, 2024
திரும்பி வந்துட்டேனு சொல்லு..!

சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, சென்னை அடுத்த மறைமலை நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஆலையை ஃபோர்டு நிறுவனம் மூடியது. இந்நிலையில், ஏற்றுமதிக்கான கார்கள் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 16, 2025
கண்ணீரிலேயே இத்தனை Variety இருக்கா?

கண்களில் இருந்து வரும் கண்ணீரில் உள்ள கெமிக்கல் நாம் எதனால் அழுகிறோம் என்பதை பொறுத்து வேறுபடுகிறதாம். அதாவது சோகத்தால் வரும் கண்ணீரில் Stress Hormone-களான Prolactin, Adrenocorticotropic hormone வெளியாகிறதாம். இவை வெளியேறுவதால், உங்கள் மனநிலை மேம்படும் என்கின்றனர். இதே, ஆனந்த கண்ணீரில் endorphin, oxytocin ஹார்மோன்கள் வெளியாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE IT.
News November 16, 2025
BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6-ஐ தொட்டுள்ளது. நேற்று புதிய உச்சமாக ₹5.95 ஆக உயர்ந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. கோழித் தீவன மூலப் பொருள்களின் விலை உயர்வே, முட்டையின் விலையேற்றத்திற்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொள்முதல் விலை அதிகரிப்பால், சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹7 முதல் ₹8 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது.
News November 16, 2025
பயங்கரவாதியின் வீட்டை தகர்த்ததற்கு J&K CM கண்டனம்

டெல்லி வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்திய உமரின் <<18283443>>வீட்டை தகர்த்ததற்கு<<>> ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயலால் ஒருவரின் கோபம் மட்டுமே அதிகரிக்கும் எனவும், இது எதுவும் இல்லாமலேயே J&K-வில் தீவிரவாத செயல்பாடுகள் குறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்றால், அது எப்போதோ ஒழிந்திருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.


