News September 13, 2024
திரும்பி வந்துட்டேனு சொல்லு..!

சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, சென்னை அடுத்த மறைமலை நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஆலையை ஃபோர்டு நிறுவனம் மூடியது. இந்நிலையில், ஏற்றுமதிக்கான கார்கள் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 28, 2025
காலை உணவில் கட்டாயம் இது இருக்கணும்..

காலை உணவில் தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ப்ரோ-பயோடிக் இருப்பதால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை இது அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை குறையும், வயிற்று பிரச்னைகள் வராது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நல்ல மனநிலையில் இருப்பீர்கள், மூளை செயல்பாடு நன்றாக இருக்கும் என டாக்டர்கள் சொல்கின்றனர். மொத்தத்தில் உங்கள் முழு உடலையும் பாதுகாக்கும் சூப்பர் ஃபுட்டாக தயிர் செயல்படுகிறது. SHARE.
News November 28, 2025
நேபாள புதிய ரூபாய் நோட்டில் இந்திய பகுதிகள்

நேபாளத்தில் நேற்று புதிய ₹100 நோட்டு வெளியிடப்பட்டது. அதில், உத்தராகண்டின் லிபுலேக், லிம்பியாதுரா & காலாபானி பகுதிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக, 2020-ல், முன்னாள் PM சர்மா ஒலி தலைமையிலான அரசு, இந்த 3 பகுதிகளையும் உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையிலும், அந்த வரைபடம் அந்நாட்டு பார்லிமென்டில் அங்கீகரிக்கப்பட்டது.
News November 28, 2025
நேபாள புதிய ரூபாய் நோட்டில் இந்திய பகுதிகள்

நேபாளத்தில் நேற்று புதிய ₹100 நோட்டு வெளியிடப்பட்டது. அதில், உத்தராகண்டின் லிபுலேக், லிம்பியாதுரா & காலாபானி பகுதிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக, 2020-ல், முன்னாள் PM சர்மா ஒலி தலைமையிலான அரசு, இந்த 3 பகுதிகளையும் உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையிலும், அந்த வரைபடம் அந்நாட்டு பார்லிமென்டில் அங்கீகரிக்கப்பட்டது.


