News April 6, 2024

தேஜஸ்வி சூர்யா சொத்து மதிப்பு 30 மடங்கு உயர்வு

image

பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி எம்.பியும், பாஜக வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு ₹4.10 கோடி எனத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் அவர் அறிவித்த சொத்து மதிப்பு ₹13.46 லட்சமாக இருந்த நிலையில், 5 ஆண்டுகளில் அவை 31.5 மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், பெங்களூருவில் அவர் மீது 2 வழக்குகளும், டெல்லியில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News February 19, 2026

மாணிக்கம் தாகூருக்கு குட்டு வைத்ததா காங்கிரஸ்?

image

திமுகவுக்கு எதிராக சீறிவரும் மாணிக்கம் தாகூரை காங்., மேலிடமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால், தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே வருவோம் என திமுக கறார் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் & பிரவீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கார்கேவிடம் செல்வப்பெருந்தகையும் சொல்ல, இனி இப்படி செய்யவேண்டாம் என மாணிக்கத்தை காங்., கண்டித்திருப்பதாக பேசப்படுகிறது.

News February 19, 2026

மாணிக்கம் தாகூருக்கு குட்டு வைத்ததா காங்கிரஸ்?

image

திமுகவுக்கு எதிராக சீறிவரும் மாணிக்கம் தாகூரை காங்., மேலிடமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால், தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே வருவோம் என திமுக கறார் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் & பிரவீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கார்கேவிடம் செல்வப்பெருந்தகையும் சொல்ல, இனி இப்படி செய்யவேண்டாம் என மாணிக்கத்தை காங்., கண்டித்திருப்பதாக பேசப்படுகிறது.

News February 19, 2026

புதிய மாவட்டங்கள் பிரிப்பதை மறந்தார் முதல்வர் ஸ்டாலின்!

image

ஸ்டாலின் தலைமையிலான நடப்பு ஆட்சியில் தற்போது வரை புதிய மாவட்டம் உருவாக்குவதை அவர் மறந்துவிட்டதாக பேச்சு எழுந்துள்ளது. 2021 தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்த கும்பகோணம் தனி மாவட்டமாக உதயமாகும் என்ற வாக்குறுதி நிறைவேறாதது அங்கு திமுகவினரையே அப்செட் ஆக்கியுள்ளதாம். முன்னதாக MGR(5), கருணாநிதி(9), ஜெயலலிதா(7), EPS(6) என CM ஆக தங்களது ஆட்சிக் காலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்கியிருந்தனர்.

error: Content is protected !!