News April 25, 2024

நிதிஷ்குமாரின் சர்ச்சை பேச்சுக்கு தேஜஸ்வி பதிலடி

image

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பலர் அரசியலில் இருக்கிறார்கள் என்ற நிதிஷ்குமாரின் கருத்துக்கு தேஜஸ்வி யாதவ் பதிலளித்துள்ளார். நிதிஷ் எதைச் சொன்னாலும் அதை ஆசிர்வாதமாகவே கருதுவோம். ஏனெனில், அவர் வயதில் மூத்தவர். ஆனால், இதைச் சொல்வதால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனக் கூறினார். முன்னதாக லாலுவை குறிவைத்து நிதிஷ் தேர்தல் பரப்புரையில் இவ்வாறு பேசினார். லாலுவுக்கு 7 மகள் 2 மகன்கள் உள்ளனர்.

Similar News

News January 7, 2026

FLASH: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 17 சீட்டு?

image

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுகவுடன் இணைந்துள்ள பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளதை <<18785984>>உறுதி செய்த EPS<<>>, தொகுதிகள் குறித்த விவரங்களை பின்னர் அறிவிப்போம் என்றார். ஆனால், பாமக தரப்பில், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்துள்ளது. அதில், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளதாம்.

News January 7, 2026

மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி!

image

தனக்கு எதிராக பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை HC-ல் நடந்துவரும் வழக்கில், ரங்கராஜின் கோடிக்கணக்கான வியாபாரத்தை பாதிக்கும் வகையில் அவரை பற்றி அவதூறு பரப்பி யூடியூபில் பணம் சம்பாதிப்பதாக வாதிடப்பட்டது. அதற்கு கிரிசில்டா தரப்பு, மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் ரங்கராஜ் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டது.

News January 7, 2026

₹1,020 கோடி ஊழல் புகார்.. KN நேரு மீது FIR பதிய மனு

image

அமைச்சர் KN நேரு மீதான ₹1,020 கோடி புகாரில் FIR பதிவு செய்யக்கோரி HC-ல் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. MP இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், நகராட்சி நிர்வாகத் துறையில் நியமனம் மற்றும் ஒப்பந்த விநியோகங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது என்றும், ED அளித்த ஆதாரங்களுடன் புகாரளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையும், காவல்துறையும் நேரு மீது வழக்குப்பதிய மறுக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!