News July 15, 2024

ரவுடிகளைக் கண்காணிக்க குழு அமைப்பு

image

தமிழகத்தில் 4 மண்டலங்களில் ரவுடிகளைக் கண்காணிக்க குழு அமைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அக்குழு, ரவுடிகளுக்குக் கிடைக்கும் பொருளாதார உதவிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ரவுடிகள் மறுவகைப்படுத்தப்பட்டு காவல்துறையால் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றும், மீகவும் பயங்கரமான 550 ரவுடிகளை குறிவைத்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Similar News

News November 23, 2025

புதுவை: வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

image

புதுவை உழவர்கரை நகராட்சி பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணியுரியும் வணிக நிறுவனங்களில் உள்புகார் குழுவை ஒரு வாரத்தில் உருவாக்கி, அதனை ஷிபாக்ஸ் (https://shebox.wcd.gov.in/) என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அத்தகவலை நகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர் கரை நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

News November 23, 2025

ஏலியனுடன் பேசினாரா USA முன்னாள் அதிபர் புஷ்?

image

ஏலியன்கள் பற்றி தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ‘The Age of Disclosure’ ஆவணப்படம் மேலும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. அதில், முன்னாள் USA அதிபர் ஜார்ஜ் HW புஷ்-க்கு ஏலியன்கள் பற்றி தெரியும் என்று விண்வெளி இயற்பியலாளர் எரிக் டேவிஸ் தெரிவித்துள்ளார். 3 UFO விண்கலங்கள் பூமிக்கு வந்ததாகவும், ஏலியன்கள் CIA-வை தொடர்பு கொண்டதாகவும் புஷ் கூறியதாக டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

News November 23, 2025

ஏண்டா தவெகவை தொட்டோம் என ஃபீல் பண்ணுவீங்க: விஜய்

image

2026-ல் தவெக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறி வைத்தால் தவறாது; தவறும் என்றால் குறி வைக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் வசனத்தை சுட்டிக்காட்டினர். மேலும், இந்த எம்ஜிஆர் வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என திமுகவை சீண்டிய அவர், ஏண்டா விஜய்யை தொட்டோம்; விஜய்யுடன் இருப்பவர்களை தொட்டோம் என நினைக்கும் நிலை வரும் என்றும் எச்சரித்தார்.

error: Content is protected !!