News February 13, 2025
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் இனி பணிநீக்கம்..
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736426895684_55-normal-WIFI.webp)
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் வகையில் விதிகளை திருத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களை முற்றிலும் தடுக்கவும், புகாரில் சிக்கியவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் ஆகி ஜாமின் பெற்று வெளியில் வந்துவிடுவதால் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2025
8-ம் வகுப்பு மாணவி தற்கொலை: தவெக நிர்வாகி கைது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739435245989_1241-normal-WIFI.webp)
விழுப்புரம் அருகே காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தவெக சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளரின் மைத்துனரும், நரசிங்கராயன்பேட்டை பொருளாளருமான சரவணன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
News February 13, 2025
இந்தியர்களுக்கு இஸ்ரேலில் மெகா வேலைவாய்ப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739422012790_1173-normal-WIFI.webp)
இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வரும் நிலையில், இன்னும் அதிக ஊழியர்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார். போரால் சிதிலமடைந்த நாட்டை மறு உருவாக்கம் செய்ய படித்த, படிக்காத என அனைத்துத் தரப்பு ஊழியர்களும் தேவைப்படுவதாகவும், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக தங்களது அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News February 13, 2025
CM தலைமையில் DISHA குழுக் கூட்டம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739424457406_1173-normal-WIFI.webp)
TN முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் சனிக்கிழமை அன்று DISHA குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்த கூட்டம் நடக்கவுள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி TN முதல்வர் தலைமையில் DISHA குழு அமைக்கப்பட்டுள்ளது.