News April 23, 2025
தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
நவம்பர் 15: வரலாற்றில் இன்று

*1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1949 – மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். *2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. *1875 – விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள். *1982 – காந்தியவாதி வினோபா பாவே உயிரிழந்த நாள். *1986 – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்தநாள்.
News November 15, 2025
SA கேப்டனை உருவ கேலி செய்த பும்ரா

IND vs SA மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. SA கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் செய்த போது, அவரது உயரத்தை கேலி செய்யும் வகையில் ‘Bauna’ (குள்ளமானவர்) என பும்ரா கூறியது, ஸ்டம்ப் மைக்கில் கேட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் பும்ராவை விமர்சித்தனர். ஆனால், SA கோச் ஆஷ்வெல் பிரின்ஸ், இந்த விவகாரத்தை பெரிதாக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
அனில் அம்பானி மீது பிடியை இறுக்கும் மத்திய அரசு

வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக <<17314173>>அனில் அம்பானி<<>>க்கு ED மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வீடியோ காலில் ஆஜராக விடுத்த கோரிக்கையும் மறுத்துள்ளது. முன்னதாக, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு (ADAG) எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, ADAG குழுமத்திற்கு சொந்தமான 4 நிறுவனங்கள் தற்போது கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது.


