News April 23, 2025
தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
வெற்றி பெற்றார் கேரளாவின் முதல் பெண் IPS அதிகாரி

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் படி, 45 ஆண்டுகால CPM – LDF கூட்டணி தொடர் வெற்றிக்கு முடிவு கட்டி, திருவனந்தபுரம் மாநகராட்சியை <<18551942>>பாஜக<<>> கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் சாஸ்தமங்கலம் வார்டில் போட்டியிட்ட BJP வேட்பாளரும், கேரளாவின் முதல் IPS அதிகாரியுமான ஸ்ரீலேகா, CPM வேட்பாளர் அம்ரிதாவை 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார். இவரே திருவனந்தபுரம் மேயராவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.
News December 13, 2025
BREAKING: வரலாறு காணாத விலை உயர்வு.. புதிய உச்சம்

தங்கத்தை போன்று முட்டை விலையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றில் முதன்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6.20 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ₹6.15-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்க வாய்ப்புள்ளது. உங்க பகுதியில் முட்டை விலை என்ன?
News December 13, 2025
இரட்டை வேடம் போடும் திமுக: அன்புமணி

அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் அவர்களது 10 அம்சக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி X-ல் அவர், <<18551462>>TN 16% பொருளாதார வளர்ச்சி<<>> அடைந்ததாக மார்தட்டும் CM ஸ்டாலின், நிதி நெருக்கடி எனக் கூறி கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது இரட்டை வேடம் என கூறியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது கோரிக்கைகளை ஆதரித்த திமுக, தற்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பதாகவும் சாடியுள்ளார்.


