News April 23, 2025

தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

image

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

சத்தியத்தை காப்பாற்ற சொல்லி பதிவிடவில்லை: DKS

image

கர்நாடகா காங்.,கில் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்ற <<18401800>>DKS-ன்<<>> X பதிவு அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதை தான் பதிவிடவில்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே DKS-ஐ CM ஆக்கினால் ஆதரவு தருவேன் என CM ரேஸில் உள்ளவரும், சித்தராமையாவின் தீவிர ஆதரவளருமான, மூத்த அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

News November 27, 2025

WPL திருவிழா: ஜன.9-ல் தொடங்குகிறது

image

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஜன.9-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நவி மும்பையில் உள்ள DY Patil மைதானம், வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 3 சீசன்களில், 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

News November 27, 2025

WPL திருவிழா: ஜன.9-ல் தொடங்குகிறது

image

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஜன.9-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நவி மும்பையில் உள்ள DY Patil மைதானம், வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 3 சீசன்களில், 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!