News April 23, 2025
தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
பாஜக ‘P’ டீம்: தமிழிசை

தமிழகத்தின் 2026 தேர்தல் பிஹார் தேர்தல் போல இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். விஜய், ஸ்டாலின் கூறுவது போல பாஜக ஏ டீம், பி டீ எல்லாம் கிடையாது எனவும் நாங்கள் ’P’ டீம், அதாவது People’s Team என்றும் கூறியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க MLA-க்களை பெறும் என்ற அவர், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
மாதவிடாய் தள்ளிப்போகிறதா? சிம்பிள் வைத்தியம்

பெண்களே, மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போகிறதா? கவலை வேண்டாம். இந்த எளிய விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தாலே இதனை சரி செய்யலாம். ➤மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் ➤பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம் ➤கொத்தமல்லி இலை, விதைகளை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் அருந்தலாம் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்க!
News November 22, 2025
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. RBI விளக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் <<18352591>>குறைந்து ₹89.46 ஆக<<>> உள்ளது. இதனால், கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக்ஸ் போன்ற இறக்குமதி பொருள்களுக்கு அதிக ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். இந்நிலையில், இந்தியாவிடம் போதிய அளவில் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாகவும், நாட்டில் நிதிநிலைத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.


