News May 28, 2024
மோடியை விமர்சித்த ஆசிரியை பணியிடை நீக்கம்

உ.பி.,யின் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றுபவர் வர்ஷா. இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடி & முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீது பகையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அவரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
படி ஏறவே மூச்சுத்திணறும் ‘மின்னல் மேன்’

ஒரு காலத்தில் 100 மீட்டரை 9.58 செகண்டில் ஓடிய உலகின் மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட், தற்போது மாடிப் படி ஏறவே தான் சிரமப்படுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 2017-ல் ஓய்வு பெற்றபின், டிவி பார்ப்பது, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது என லைஃப்ஸ்டைல் மாறிவிட்டதால், உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், மீண்டும் ஓட்டப்பயிற்சி செய்ய வேண்டும் என நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
News September 17, 2025
சோக மரணம்.. உதயநிதி நேரில் அஞ்சலி

கரூரில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், கட்சியின் முன்னோடி உறுப்பினரான குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விருதை பெறும் முன்னரே உடல் நலக் குறைவால் அவர் மறைந்தது கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது வீட்டிற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், சிவராமன் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
News September 17, 2025
டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹47,600 சம்பளத்தில் வேலை!

Union Public Service Commission-ல் காலியாக உள்ள 213 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைக்கேற்ப டிகிரி, சட்டத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும். சம்பள விகிதம்:₹47,600 முதல் ₹1,18,500 வரை. இதற்கு வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <