News April 9, 2025
வரி விதிப்பு: கவலையில் ஆழ்ந்த சந்திரபாபு நாயுடு

உலகளாவிய கடல் உணவு ஏற்றுமதியில் ஆந்திரா முன்னணியில் இருக்கிறது. தேசிய அளவில் இறால் உற்பத்தியில் மட்டும் அதன் பங்கு 76%. பல நாடுகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்திய டிரம்ப், ஈக்வடாருக்கு 10% மட்டுமே விதித்துள்ளார். இதனால், கடல் உணவு சந்தையை அந்நாடு எளிதாக பிடிக்கக்கூடும். எனவே, கடல் உணவுக்காவது வரிவிலக்கு பெற முயற்சிக்குமாறு மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News December 7, 2025
சற்றுமுன் அதிரடி கைது

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
News December 7, 2025
அரசியலில் குதிக்கிறாரா விஜய் சேதுபதி?

’சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ என Bigg Boss-ல் கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என SM-ல் கேள்வி எழுந்தது. ஆனால், அந்த நோக்கத்தில் அவர் அதை சொல்லவில்லை. சனிக்கிழமை எபிசோடில் VJS-யிடம் BB Contestants பற்றி ஆடியன்ஸ் புகார் வைத்தனர். இதை கேட்ட VJS, ‘ஏதோ தொகுதி மக்களிடம் குறை கேட்டு வந்தது போல் இருப்பதாகவும், சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ எனவும் காமெடியாக சொன்னார்.
News December 7, 2025
தர்மம் மீண்டும் வெல்லும்: ராமதாஸ்

<<18492965>>PMK உள்கட்சி<<>> விவகாரத்தில் தலையிட EC-க்கு அதிகாரம் இல்லை என டெல்லி HC தெரிவித்தது. இந்நிலையில், 46 ஆண்டுகள் உழைத்து வளர்த்த பாமகவை, என்னிடம் இருந்து பறிக்க செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்பேன் என்று கூறியுள்ள அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


