News April 9, 2025
வரி விதிப்பு: கவலையில் ஆழ்ந்த சந்திரபாபு நாயுடு

உலகளாவிய கடல் உணவு ஏற்றுமதியில் ஆந்திரா முன்னணியில் இருக்கிறது. தேசிய அளவில் இறால் உற்பத்தியில் மட்டும் அதன் பங்கு 76%. பல நாடுகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்திய டிரம்ப், ஈக்வடாருக்கு 10% மட்டுமே விதித்துள்ளார். இதனால், கடல் உணவு சந்தையை அந்நாடு எளிதாக பிடிக்கக்கூடும். எனவே, கடல் உணவுக்காவது வரிவிலக்கு பெற முயற்சிக்குமாறு மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News January 17, 2026
புதுவை: அதிக மது குடித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

புதுவை மாநிலம் கோட்டுச்சேரி சுனாமி நகர் செல்வகுமார்(56) மாற்றுதிறனாளி மனைவி சின்னபொண்ணு. இவர்களுக்கு 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். செல்வகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்த நிலையில், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்தவர், மண்டபத்தூர் சாராயக்கடை அருகே இறந்து கிடந்துள்ளார். கோட்டுச்சேரி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்து PHOTOS

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேல் உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம்.
News January 17, 2026
BREAKING: மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி

பிப்.1-ல் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் மகளிர் முன்னேற்றத்திற்காக முக்கிய திட்டங்கள், சில திருத்தங்களை கொண்டுவர நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு ஏதுவாக ஜன் தன் கணக்குகளுடன் கிரெடிட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும், தொழில் தொடங்கும் பெண்களுக்கு காப்பீடு வழங்குவது பற்றியும் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.


